|
ம
மான ஆத்துமாவிற்கு நாசமாவது,
1தாஸ்யாசித்தி; ‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தையொழிய
நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.
(10)
244
உயிர்கள் எல்லா
உலகமும்
உடையவனைக்
குயில்கொள் சோலைத்
தென்குருகூர்ச்
சடகோபன்
செயிர்இல்சொல்
இசைமாலை
ஆயிரத்துள்
இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை
ஊனிடை ஒழிவிக்குமே.
பொ-ரை
எல்லா உயிர்களையும்
எல்லா உலகங்களையுமுடையவனைக் குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த
ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த குற்றமில்லாத சொற்களையுடைய இசையுடன் கூடின மாலையாகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இப்பத்துப்பாசுரங்களும் உயிருக்கு வந்தேறியாக உள்ள ஊன் பொருந்திய சரீரத்திலுண்டான சம்பந்தத்தைப்
போக்குவிக்கும்.
வி-கு :
செயிர் - குற்றம். யாக்கை - எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது; சரீரம். ஊன் - தசை.
ஈடு :
முடிவில், 2தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட, ‘நிலைப்பெற்று
என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்; அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர்
நீடுபெற்றதாயிருந்தது. எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை - ‘இவர் தரித்த பின்பாயிற்று
அவன் எல்லாவுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;
_________________________________________________
1. தாஸ்யாசித்தி
- தாஸ்யம் இல்லாமை. என்றது, ‘சேஷத்துவம் இல்லாமை’
என்றபடி. சேஷமான பொருளுக்கு - ஆத்துமாவுக்கு.
சேஷத்துவம்
நிரூபகமானால் - சேஷத்துவத்தைக்கொண்டே
நிரூபிக்கப்படவேண்டியிருந்தால். நிரூபகத்தை
ஒழிய - அந்த சேஷத்துவத்தை
ஒழிய. நிரூப்ய சித்தி இல்லை - நிரூபிக்கப்படுகின்ற ஆத்துமா இல்லை.
என்றது, ‘சேஷத்துவம் இல்லையாம்போது ஆத்துமாவும் இல்லையாம்,’
என்பது கருத்து.
2. இப்பாசுரத்திற்கு
அவதாரிகை காணப்படவில்லை. இத்திருவாய்மொழி,
கற்றார்க்குச் சரீர சம்பந்தத்தை அறுத்துக்
கொடுக்கும் என்பதனை
அவதாரிகையாகக் கொள்க.
|