முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
79

தந

தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.

(2)

247

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணி றைசுனை நீர்த்திரு வேங்கடத்து
எண்இல் தொல்புகழ் வானவர் ஈசனே.   

    பொ-ரை : பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன், அழகினைக்கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களையுடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையுமுடையவன், தெளிந்த நிறைந்த தண்ணீரையுடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற அளவிடற்கரிய இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகட்குத் தலைவன் ஆவன்.

    வி-கு : ‘தொல்புகழ்’ என்பது ஈசனுக்கு அடை. ‘கருமாணிக்கம்’ என்பது இல்பொருளுவமை.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘நாம் இங்ஙனம் அடிமை செய்ய வேண்டும் என்று விரும்புகிற இதுவேயோ வேண்டுவது? அவன் தான் நமக்கு அனுபவத்தின் நிறைவைத் தருவானோ?’ என்ன, ‘ஆசையற்றவர்கட்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிறவன், ஆசையோடு கூடிய நமக்குத் தரச் சொல்லவேண்டுமோ?’ என்கிறார்.

    அண்ணல் - ‘குறிஞ்சி நிலத்துத்தலைமகன்’ என்னுதல்; ‘எல்லார்க்கும் தலைவன்’ என்னுதல். மாயன் - அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியங்களையுடையவன். ‘அவற்றில் 2ஓர் அம்மான் பொடி சொல்லிக்காணீர்,’ என்ன, சொல்லுகிறார்

___________________________________________________ 

1. ‘வானவர் ஈசனே’ என்பதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
  அருளிச்செய்கிறார். ‘ஆசையில்லாதவர்’ என்றது, பகவானுடைய அனுபவ ரச
  பூர்த்தியைத் திருவுள்ளம் பற்றி.

2. அம்மான் பொடி - வசீகரண சாதனமான ஒரு வகைப்பொடி. பாலர்களை
  வசீகரிக்கைக்காக அவர்கள்மேலே ‘அம்மான்’ என்று சொல்லி ஒரு பொடி
  விசேடத்தைத் தூவினால், அந்தப் பாலர்கள் கள்ளர் பின்னே ‘அம்மான்,
  அம்மான்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்; அந்தப் பொடி என்றபடி.
  அப்படியே, ஆச்சரியமாக வசீகரிக்கும் அழகு முதலியவற்றில் ஒன்றனைச்
  சொல்லும் என்றபடி.