|
னுக
னுக்கு ஏற்றஞ்சொல்லும்போது
தட்டியிலிருந்த காலத்தின் தன்மையையிட்டு ஏற்றஞ்சொல்ல ஒண்ணாதே,’ என்கிறார் என்றவாறு.
‘ஆயின், திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின், ‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்; இது கிடக்க அதனையோ சொல்லுவது?’
என்கிறார்.
நிறைவொன்றுமிலேன்
- தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று.
1‘தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்;
சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்;
‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை
நெஞ்சில் அறிவில்லாதானொருவன்; அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும்
பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது ‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்; நன்மை
சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்; உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச்
செய்து போந்தவன்; அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை
நினைத்துப் போந்தவன்; அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்;
புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும்
அபகரிப்பவன்; ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்;
இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக்
____________________________________________________
1. ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’
என்று இப்படித் தம்மைத் தாழ்விற்கு
எல்லை நிலமாகச் சொன்னார் உளரோ?’ என்னும் வினாவிற்கு
விடையாக,
ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து ‘அமர்யாத:’ என்ற சுலோகத்தை
எடுத்துக்காட்டி, அதற்குப்
பொருளும் அருளிச்செய்கிறார், ‘தாய்க்கும்
மற்றொரு பொருளுக்கும்’ என்றது முதல், மேன்மேல்
எனக் காரியம்
பார்ப்பவன்’ என்றது முடிய.
|