என
என்றான் திருவடி.
இதனால், ‘கோலின காரியத்தின் அளவல்ல இப்பாரிப்பு’ என்றபடி. பட்டர் திருக்கோட்டியூரிலே
எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேசுவரன் நாற்றோளனாயோ,
இருதோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, 1‘ஏகாயநர் இருதோளன் என்னாநின்றார்கள்;
நம்முடையவர்கள் நாற்றோளன் என்னாநின்றார்கள்,’ என்ன, ‘இரண்டிலும் வழி யாது?’ என்ன,
‘இருதோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது; நாற்றோளன் என்று தோன்றிற்றாகில்
பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்; 2நம்மளவு அன்றியே தெரியக்
கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?
‘ஆயின், சாதாரண
மக்களுக்கு அங்ஙனம் தோன்ற இல்லையே?’ எனின், ஆயர் பெண்களுக்கு நான்காய்த் தோன்றி, உகவாத
கம்சன் முதலியோர்களுக்கு இரண்டாய்த் தோன்றுமாறு
_____________________________________________________
இப்பாரிப்பு’ என்றது,
‘எத்தனித்த காரியத்தோடே நிற்குமதன்று மநோரதம்,’
என்றபடி. கோலின காரியமாவது, வடிவழகு முதலானவைகளாலே
சேதநரை
வசீகரித்தல். ‘அது, ஆபரணச் சேர்த்தியாலும் கூடும்: அப்படியின்றிக்
கேவலம் வடிவழகாலேயே
ஆக வேண்டுமோ?’ என்றபடி. ‘என்னை
வசீகரித்தலுக்கு அலங்கரித்தாலும் போதுமே? அலங்கரியாதே வைத்தது
என்?’ என்பது திருவடியின் பாவம்.
பரமபத்தனான
திருவடி,
முதன்முதல் தரிசிக்கும்
போது ஸ்ரீ
ராமபிரானுடைய திருமேனியில் நான்கு திருத்தோள்களைத் தரிசித்தான்;
ஆதலால், அவனுடைய
வார்த்தையான ‘ஆயதாஸ்ச’ என்ற சுலோகத்தில்
‘ஸாஹவ:’ என்ற பன்மைச்சொல்லை ஸ்ரீ வால்மீகி
பகவான்
பிரயோகித்துள்ளார் என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம்.
‘ஒன்றுஅல் லனபல
தமிழ்நடை; வடநூல்
இரண்டுஅல் லவைபல
என்றிசி னோரே.’
என்ற இலக்கணம் ஈண்டு நினைவிற்கோடல்
வேண்டும். தம் திருவுள்ளக்
கருத்துக்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘பட்டர் திருக்கோட்டியூரிலே’
என்று
தொடங்கி. அன்றியே, ‘பாசுரத்தில் ‘நான்கு’ என்றிருப்பதற்கு ஐதிஹ்யம்
காட்டுகிறார்’,
என்னலுமாம்.
1. ஏகாயநர் - துவைதிகள்.
பெரிய பெருமாள் - திருவரங்கத்தில்
எழுந்தருளியிருக்கின்ற இறைவன். பெருமாள் - ஸ்ரீ ராமபிரான்.
2. ‘ஆயின், பெரிய
பெருமாள் நாற்றோளராய்த் தோன்றின இடம் உண்டோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘நம்மளவன்றியே’ என்று
தொடங்கி. ‘கையினார் சுரிசங்கு’ என்பது,
அமலன் ஆதிபிரான்,
7.
|