முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
6

1 ப

1 படியாணியான ஒளி என்னவுமாம். ஆக, ‘நீரிலே நீர் கலந்தது போன்று வேற்றுமையறிதற்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது ; முடியவில்லை,’ என்றபடி.

    திருமாலே கட்டுரையே - இதுவும் ஒரு சேர்த்தியழகு இருக்கிறபடி. 2‘அகலகில்லேன்’ என்று பிரியமாட்டாமலிருக்கிற பிராட்டியும், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீயுங்கூட விசாரித்து இதற்கு ஒரு போக்கடி அருளிச்செய்ய வேண்டும். இன்று அனுபவிக்கப் புக்க இவர், 3என்றும் ஓரியல்வினர் என நினைவரியவர்’ என்பர்; என்றும் அனுபவிக்குமவர்கள் 4‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்?’ என்றே பயிலாநிற்பர்கள்; ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான இறைவன் 5‘தனக்கும் தன் தன்மையறிய அரியனாய்’ இருப்பான்;’ ஆக, இப்படி இன்று, அனுபவிக்கப் புக்க இவரோடு, 6என்றும் அனுபவிக்குமவர்களோடு, இறைவன் தன்னோடு வேற்றுமையில்லை இந்த ஐயம் தொடர்வதற்கு; தமக்கு இந்த ஐயம் அறுதியிடவொண்ணாதது போலவே அவர்களுக்கும் என்றிருக்கிறார்; ஆதலின், ‘திருமாலே கட்டுரையே’ என்கிறார். கட்டுரையே - 'சொல்ல வேணும்’ என்றபடி.

(1)

224

கட்டுரைக்கில் தாமரை நின்
    கண்பாதம் கைஒவ்வா;
சுட்டுரைத்த நன்பொன்உன்
    திருமேனி ஒளிஒவ்வாது;
ஒட்டுரைத்துஇவ் உலகுன்னைப்
    புகழ்வுஎல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்குஎன்றே
    காட்டுமால் பரஞ்சோதீ!

_____________________________________________________

1. ‘படியாணியான ஒளி என்னவும் ஆம்,’ என்றது, ‘இந்தத் திருமேனி அந்தத்
  திருமேனியாய் மலர்ந்ததுவோ!’ என்றபடி. படி ஆணி - ஆணிப்பொன்.

2. திருவாய். 6. 10 : 10.

3. திருவாய். 1. 1 : 6.

4. பெரிய திருமொழி, 8.  9.

5. திருவாய். 8. 4 : 6.

6. என்றும் அனுபவிக்குமவர்கள் - நித்தியசூரிகள்.