1 ப
1
படியாணியான ஒளி
என்னவுமாம். ஆக, ‘நீரிலே நீர் கலந்தது போன்று வேற்றுமையறிதற்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது
; முடியவில்லை,’ என்றபடி.
திருமாலே கட்டுரையே
- இதுவும் ஒரு சேர்த்தியழகு இருக்கிறபடி. 2‘அகலகில்லேன்’ என்று பிரியமாட்டாமலிருக்கிற
பிராட்டியும், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீயுங்கூட விசாரித்து இதற்கு ஒரு போக்கடி அருளிச்செய்ய வேண்டும்.
இன்று அனுபவிக்கப் புக்க இவர், 3என்றும் ஓரியல்வினர் என நினைவரியவர்’ என்பர்;
என்றும் அனுபவிக்குமவர்கள் 4‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்?’ என்றே பயிலாநிற்பர்கள்;
ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான இறைவன் 5‘தனக்கும் தன் தன்மையறிய அரியனாய்’ இருப்பான்;’
ஆக, இப்படி இன்று, அனுபவிக்கப் புக்க இவரோடு, 6என்றும் அனுபவிக்குமவர்களோடு,
இறைவன் தன்னோடு வேற்றுமையில்லை இந்த ஐயம் தொடர்வதற்கு; தமக்கு இந்த ஐயம் அறுதியிடவொண்ணாதது
போலவே அவர்களுக்கும் என்றிருக்கிறார்; ஆதலின், ‘திருமாலே கட்டுரையே’ என்கிறார். கட்டுரையே
- 'சொல்ல வேணும்’ என்றபடி.
(1)
224
கட்டுரைக்கில் தாமரை நின்
கண்பாதம் கைஒவ்வா;
சுட்டுரைத்த நன்பொன்உன்
திருமேனி ஒளிஒவ்வாது;
ஒட்டுரைத்துஇவ் உலகுன்னைப்
புகழ்வுஎல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப்
புற்குஎன்றே
காட்டுமால்
பரஞ்சோதீ!
_____________________________________________________
1. ‘படியாணியான ஒளி
என்னவும் ஆம்,’ என்றது, ‘இந்தத் திருமேனி அந்தத்
திருமேனியாய் மலர்ந்ததுவோ!’ என்றபடி. படி
ஆணி - ஆணிப்பொன்.
2. திருவாய். 6.
10 : 10.
3. திருவாய். 1.
1 : 6.
4. பெரிய திருமொழி,
8. 9.
5. திருவாய். 8.
4 : 6.
6. என்றும் அனுபவிக்குமவர்கள்
- நித்தியசூரிகள்.
|