இயல
இயல்பான கல்யாண குணங்களையுடைய
கிருஷ்ணனே! 1என் பரஞ்சுடரே - எல்லா விதத்தாலுமுண்டான ஏற்றத்தினை எனக்கு அறிவித்தவனே!
இனி, ‘கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’
என்னுதல்; ‘பரஞ்சுடரே உடம்பாய்’ என்னக் கடவதன்றோ? காண்பான் கூவுகின்றேன் - ஒரு சாதனத்தைச்
செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று, காண வேண்டும் என்று கூப்பிடுகிறேன். எங்கு எய்தக்
கூவுவன் - ‘ஒரு கொசுக்கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே
வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?
(8)
242
கூவிக் கூவிக்
கொடுவினைத்
தூற்றுள்நின்று
பாவியேன் பலகாலம்
வழிதிகைத்து,
அலமருகின்றேன்;
மேவிஅன்று ஆநிரை
காத்தவன்,
உலகம்எல்லாம்
தாவிய அம்மானை
எங்குஇனித்
தலைபெய்வனே?
பொ-ரை :
கொடிய பாவங்கட்கு
இருப்பிடமான சமுசாரமான புதரில் நின்றுகொண்டு பல காலம் வழியறியாமல் கூவிக்கூவிச் சுழலுகின்ற
பாவியேனாகிய யான், அக்காலத்தில் பொருந்திப் பசுக் கூட்டங்களைக் காத்தவனும் உலகங்களையெல்லாம்
தாவி அளந்த தலைவனுமான இறைவனை இனி எங்கே கிட்டுவேன்?
____________________________________________________
1. ‘பரஞ்சுடர்’ என்பதறகு ‘எல்லா வகையாலும் உண்டான ஏற்றத்தையுடையவன்’
என்றும், ‘வடிவழகினையுடையவன்’ என்றும்
இரண்டு பொருள்
அருளிச்செய்கிறார்.
‘கண்ணா!’ என்றதனால்
தாழ நிற்றலும், ‘பரஞ்சுடரே!’ என்றதனால்
வடிவழகும், ‘என்’ என்றதனால் தமக்கு முற்றூட்டாக்குதலும்
போதரும். மூற்று
ஊட்டு ஆக்குதல் - பூர்ணாநுபவம் உள்ளதாகச் செய்தல்.
இப்பாசுரத்தில்,
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால்
கர்மயோகம் இன்மையையும், ‘ஓவுதலின்றி உன்கழல்
வணங்கிற்றிலேன்’
என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று. உபலக்ஷணத்தால்
ஞானயோகம்
இன்மையையும் கொள்க.
|