ப
பரைகளையுடைய நரகத்திலே
தரை காண ஒண்ணாதபடியாக அழுந்தி வருந்துகிற. வம்பர் - என்றும் ஒக்க யமதூதர்க்குப் புதியராவர்.
முன நாள் நலிந்தால், பிற்றை நாள் வந்து தோன்றினால், ‘முனநாள் நம்மால் நலியப்பட்டவன்’
என்று அருள் செய்யாதே, ‘மோம் பழம் பெற்றாற்போலே, ‘வாரீரோ! உம்மையன்றோ தேடித் திரிகிறது?’
என்னும்படியாவர் ஆதலின், ‘வம்பர்’ என்கிறார். வம்பு - புதுமை.
இனி, மலையை எடுத்துக்
கல் மாரி காத்து - அடியார்கள் நிமித்தமான காரியமித்தனையே வேண்டுவது; அரியன செய்தாலும் எளியதாய்த்
தோன்றும். பசுநிரைதன்னை தொலைவு தவிர்த்த - ‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை
விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’ என்கிறது. பிரானை - 2நிலா,
தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது.
சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் தலையினொடு ஆதனம் தட்டத் தடுகுட்டமாய்ப் பறவாதார் -
3‘மௌனமாக இருப்பவன், ஒன்றிலும் ஆசை இல்லாதவன்,’ என்கிறபடியே, இருக்கக்கூடிய
பரம்பொருள், 4‘அலவலை வந்து அப்பூச்சி காட்டுகிறான்’ என்னும்படி அலவலை
_____________________________________________________
1. மோம்பழம் - நறுமணமுள்ள
பழம்; மோந்துகொண்டே இருக்க
வேண்டும்படியான பழம்.
2. ‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும்
கலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால்
நும்மகள் நுமக்குமாங் கனையளே;
‘சீர்கெழு
வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும்
நீர்க்கவைதாம் என்செய்யும்?
தேருங்கால்
நும்மகள் நுமக்குமாங் கனையளே;
‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும்
யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால்
நும்மகள் நுமக்குமாங் கனையளே.’
(கலித். 9)
என்னும் தாழிசை ஈண்டு ஒப்பு
நோக்கலாகும்.
3.
சாந்தோக்ய உபநிடதம், 3 : 4,
4.
பெரியாழ்வார்
திருமொழி,
2. 1 : 2.
அலவலை - மிகுதியாகப்
பேசுகிறவன்.
|