க
கின்றானோ’ என்கிறபடியே,
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின்.
‘அருள் செய்த’
என்கிறார். நெடியோனை
- பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும், ‘நிறைவு பெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்,’
என்கிறபடியே, ‘அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப்பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.
தென்குருகுகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள் - ஆழ்வார் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேசுவரனுக்கு. அடி ஆர்ந்த
ஆயிரத்துள் - இருக்கு வேதம் போலவும், 1‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும்
எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம். அவன்
தொண்டர்மேல் முடிவு இவை பத்து - 2இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன
கோடியிலேயாமித்தனை. ஆரக்கற்கில் - நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில். இனி,
‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல். சன்மம் செய்யாமை முடியும் - அடியார்கட்கு
அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
பயிலும் திருமால் பதந்தன்னில்
நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு
- இயல்வுடனே
ஆளானார்க்கு ஆளாகும்
மாறன் அடியதனில்
ஆளாகார் சன்மமுடி யா.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1.
ஸ்ரீராமா. பால. 2 : 18.
2. இத்திருவாய்மொழியில்
சர்வேசுவரனையும் அருளிச்செய்திருக்க, ‘இவை
பத்தும் அவன் தொண்டர்மேல் முடிவு’ என்று கூறல்
பொருந்துமோ?’
என்னும் வினாவிற்கு விடையாக, ‘இதில் சர்வேசுவரனை’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
உபசர்ஜ்ஜன கோடியிலேயாமித்தனை -
முக்கியமில்லாமையிலே சேருமித்தனை. ‘கல்வியிற்பெரியன்
கம்பன்;
தெய்வப் புலவன் திருவள்ளுவன்’ என்பன போன்று அடியார்கட்கு
விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன
இத்தனை என்றபடி.
|