முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
10

அவக

அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’ என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.

    சிந்தித்து - “இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்; நெஞ்சிலே 1அடி பட நினைக்க அமையும்’ என்றபடி. உய்ம்மின் - அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது. 2‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்; இரவு பகல் எந்நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான். ‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக ‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார். தாள் சிந்தித்து உய்ம்மின் - 3அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.

(1)

334

‘உய்ம்மின் திறைகொணர்ந்து’ என்றுஉலகு
    ஆண்டவர் இம்மையே
4தம்மின் சுவைமட வாரைப்
    பிறர்கொள்ளத் தாம்விட்டு
வெம்மின் ஒளிவெயில் கானகம்
    போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித்திரு மாலை
    விரைந்துஅடி சேர்மினோ.   
   

_____________________________________________________

1. ‘அடிபட’ என்பது, சிலேடை : ‘திருவடிகள் படும்படி’ என்பதும், ‘பயில’
  என்பதும் பொருள்.

2. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 17 : 78.

3. ‘அடியற்றால்’ என்பது, சிலேடை : திருவடிகளும் மூலமும் என்பது
  பொருள்.

4. ‘யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
  சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
  வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட
  மனையானை மாற்றார் கொள.’

  என்பது நாலடியார்.