ஏத
ஏத்த அந்தப் புகழ் எங்கு
முடிவு எய்தும்? ‘ஆயின், நீர் துதிப்பதற்குக் காரணம் என்?’ எனின், ‘யான் உய்வு பெறுவதற்காக
எனக்கு உபகாரத்தைச் செய்த சர்வேசுவரனைத் தேனும் பாலும் வெல்லமும் அமுதமுமாகித் தித்திக்கும்படி
யான் ஏத்தினேன்,’ என்கிறார்.
வி-கு :
‘யான் உய்வான் எம்பிரானைத் தித்திப்ப யானும் ஏத்தினேன்,’ என முடிக்க. உய்வான் - வினையெச்சம்.
ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘நானும், எல்லா உலகங்களும், சர்வேசுவரனும் ஒரு மிடற்றினராய்
ஏத்தினாலும் ஏத்தி முடிவு பெறாத விஷயத்தை என் செல்லாமையாலே ஏத்தினேன்,’ என்கிறார்.
2யானும்
ஏத்தி - மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நானும் ஏத்துவது. ஏழ் உலகும் முற்றும் ஏத்தி - 3விசேஷஜ்ஞரோடு
அவிசேஷஜ்ஞரோடு வேற்றுமை இன்றிச் ‘சிறியார் பெரியார்’ என்னாதே எல்லாரும், ஏத்துவது.
பின்னையும் தானும் ஏத்திலும் - இயல்பாகவே முற்றறிவினனாய், தொடங்கின, காரியத்தைச் செய்து
முடிப்பதற்குத் தகுதியான ஆற்றலையுடையனுமான தானும் ஏத்துவது. தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் -
இப்படி எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தினாலும், பின்னையும் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம்
விஞ்சியாயிற்று இருப்பது விஷயம். என்றது, 4‘அந்யபரரோடு அநந்யபரரோடு
அளவுடையாரோடு அளவிலிகளோடு வேற்றுமை
_____________________________________________________
1. ‘எங்கு எய்தும்? யான் உய்வான்’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘யான் உய்வானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘என்
செல்லாமையாலே’
என்கிறார்.
2. யானும், ஏழுலகும், தானும்
என்றவற்றிலுள்ள உம்மைகள் உயர்வுப்
பொருளன.
3. விசேஷஜ்ஞர் - தத்துவ
ஞானத்தையுடையவர். அவிசேஷஜ்ஞர் -
அஃதில்லாதவர். ‘சிறியார் பெரியார்’ என்றது, மனிதர்களையும்
தேவர்களையும். இவ்விரு வகையாரிலும் உள்ள விசேஷஜ்ஞர்
அவிசேஷஜ்ஞர் என்க.
4.
‘ஏழுலகும்’ என்றதனை நோக்கி, ‘அந்யபரரோடு’ என்றும், ‘யானும்’
என்றதனை நோக்கி, ‘அநந்யபரரோடு’
என்றும், ‘தானும்’ என்றதனை
நோக்கி, ‘அளவிலிகளோடு’ என்றும் அருளிச்செய்கிறார். அந்யபரர்
- வேறு
ஒன்றிலே நோக்குள்ளவர். அநந்யபரர் - சர்வேசுவரனைத் தவிர வேறு
ஒன்றிலும் நோக்கில்லாதவர்,
அளவுடையார் - ஞானமுடையவர்.
|