366
366
மண்ணை இருந்து
துழாவி,
‘வாமனன்
மண்இது’ என்னும்;
விண்ணைத் தொழுது,
அவன் மேவு
வைகுந்தம்’
என்றுகை காட்டும்;
கண்ணைஉண் ணீர்மல்க
நின்று,
‘கடல்வண்ணன்’
என்னும்;அன் னே!என்
பெண்ணைப்
பெருமயல் செய்தாற்கு
என்செய்கேன்,
பெய்வளை யீரே!
பொ-ரை :
அணிந்த வளையல்களையுடைய பெண்காள்! இருந்து
பூமியைத் துழாவி, ‘இது வாமனனுடைய பூமியாகும்,’ என்பாள்;
ஆகாயத்தை நோக்கித் தொழுது, ‘அவன் எழுந்தருளியிருக்கின்ற பரமபதம்’ என்று கை காட்டுவாள்;
கண்களில் நீர் பெருகும்படி நின்று ‘கடல் போன்ற நிறத்தையுடையவன்’ என்பாள்: ஐயோ! என்னுடைய
பெண்ணைப் பெரிய மயக்கத்தை அடையச் செய்தவர்க்கு எதனைச் செய்வேன்?
வி-கு :
‘என்னும், காட்டும், என்னும்’ என்பன, செய்யும் என் முற்றுகள். ‘கண்ணை’ என்பதில், ஐகாரம்
அசைநிலை, உருபு மயக்கமாகக் கோடலும் அமையும். ‘அன்னே’ என்பது, அந்தோ என்னும் பொருளைக் காட்டுவதோர்
இடைச்சொல். ‘அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற் கடுத்தநாள் அரக்கர் வேந்தள். பின்னேயோ’
(கம்ப. உயுத். இராவணன் வதைப். 288.) என்றவிடத்தும் ‘அன்னே’ என்பது இப்பொருளதாதல்
காணலாகும்.
இத்திருவாய்மொழி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஈடு :
முதற்பாட்டு. 1வினவ வந்தவர்களுக்குத் தன் மகள் செய்தியைக் கூறுகின்ற தாயானவள்,
‘இப்படி இவளை எம்பெருமான் பிச்சு ஏற்றினான்; நான் இதற்கு என் செய்வேன்?’ என்கிறாள்.
மண்ணை இருந்து
துழாவி - 2‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்கு
_____________________________________________________
1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2.
திருநெடுந்தாண்டகம், 5.
|