370
370
கோமள வான்கன்றைப்
புல்கி,
‘கோவிந்தன்
மேய்த்தன’ என்னும்;
போம்இள நாகத்தின்
பின்போய்,
‘அவன்கிடக்
கைஈது’ என்னும்;
ஆம்அளவு ஒன்றும்
அறியேன்
அருவினை யாட்டியேன்
பெற்ற
கோமள வல்லியை
மாயோன்
மால்செய்து
செய்கின்ற கூத்தே!
பொ-ரை :
‘இளமையையுடைய பெரிய கன்றுகளைத் தழுவிக் ‘கிருஷ்ணன் மேய்த்த கன்றுகள் இவையாகும்’ என்பாள்;
செல்லுகின்ற இளமையையுடைய பாம்பின் பின்னே சென்று, ‘இது அவன் படுக்கை’ என்னாநின்றாள்; மேல்
விளையக் கூடியது ஒன்றனையும் அறிகின்றிலேன். போக்கற்கு அரிய தீய வினைகளையுடைய யான் பெற்ற
இளைய வல்லிக்கொடி போன்ற பெண்ணை மாயோன் மயக்கத்தைச் செய்து செய்கின்ற கூத்து என்னேதான்!’
என்கிறாள்.
வி-கு :
கோமளம் - இளமை; அழகுமாம், மேய்த்தன : வினையாலணையும் பெயர். கிடக்கை - படுக்கை. கூத்து -
தொழில் உணர்த்தும் பெயர்; பகாப்பதம்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘இவளுக்கு இந்தத் துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது என்று அறிகின்றிலேன்?’
என்கிறாள்.
கோமளம் வான் கன்றைப்
புல்கி - 2‘பருவத்தால் இளையதாய் வடிவால் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்;
‘மாணிக்கம் போலே வேறுபட்ட சிறப்பினவாய்ப் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்.
கோமளம் என்று மாணிக்கத்துக்கும் இளமைக்கும் பேர். ஆக, இப்படிக் 3காட்சிக்கு
இனியவாய்
_____________________________________________________
1. ‘ஆமளவு ஒன்றும் அறியேன்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘கோமளம்’ என்பது,
இளமை; ‘வான்’ என்பது, பெருமை; ஆகையாலே,
இரண்டற்கும் மாறில்லாமல் பொருள் அருளிச்செய்கிறார்,
‘பருவத்தால்’
என்று தொடங்கி. ‘கன்று’ என்பது. தொகுதி ஒருமையாதலின் ‘கன்றுகளை’
என்று
பொருள் அருளிச்செய்கிறார்.
3. ‘கோமளம்’
என்ற சொல்லிற்குரிய இரண்டு பொருள்களையும் திருவுள்ளத்தே
கொண்டு அவற்றை அடைவே அருளிச்செய்கிறார்,
‘காட்சிக்கு’ என்று
தொடங்கி.
|