375
375
அயர்க்கும்;சுற்
றும்பற்றி நோக்கும்;
அகலவே நீள்நோக்குக்
கொள்ளும்;
வியர்க்கும்;
மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர்
கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்
ணா!’என்று பேசும்;
‘பெருமானே,
வா!’என்று கூவும்;
மயற்பெருங் காதல்என்
பேதைக்கு
என்செய்கேன்
வல்வினை யேனே?
பொ-ரை :
‘மயங்குவாள்; பின்னர் நாற்புறத்திலும் பலகாலும் பாராநிற்பாள்; விரிந்து செல்லும்படி நீண்ட
தூரம் பார்ப்பாள்; பின்னர் வியர்த்து நீராக நிற்பாள்; குளிர்ந்த கண்களில் நீர் துளும்பும்படி
பெருமூச்சு எறிவாள்; தளர்வாள்; மீண்டும், ‘கண்ணபிரானே!’ என்று பேசுவாள்; ‘பெருமானே, வா!’
என்று கூவுவாள்; பெரிய காதலால் மயக்கங்கொண்ட என் பெண்ணிற்கு வல்வினையேன் என் செய்வேன்!’
என்கிறாள்.
வி-கு :
‘அயர்க்கும், நோக்கும், கொள்ளும், வியர்க்கும், கொள்ளும், சோரும், பேசும், கூவும்’ என்பன,
செய்யும்என் முற்றுகள். பேதை - பருவப்பெயர்.
ஈடு :
பத்தாம் பாட்டு. 1நிறம் முதலியவற்றால் எம்பெருமானை ஒத்திருக்கும் பொருள்களை நினைப்பதற்கு
ஆற்றல் இல்லாத துன்பத்தின் மிகுதியாலே இவளுக்குப் பிறந்த வேறுபாடுகளைச் சொல்லி, ‘நான் என்
செய்வேன்?’ என்கிறாள்.
அயர்க்கும் - நின்றுகொண்டு
இருக்கும்போதே சித்தத்தின் செயல் அற்று மயங்குவாள். சுற்றும் பற்றி நோக்கும் ‑ 2பின்னையும்
அறிவு குடிபுகுந்து, தன் ஆபத்தே செப்பேடாக அவன் வரவை அறுதியிட்டு, வந்து அருகே நின்றானாக,
ஆசையோடு சுற்றும் பாராநிற்பாள். அகலவே நீள் நோக்குக் கொள்ளும் - அங்குக் காணாமையாலே,
‘எப்படியும் இவ்வளவில் புறப்படாதொழியான்,’ என்று அவன் புறப்படுதல் தொடங்கிக் காண்கைக்காகப்
பரக்கக்
_____________________________________________________
1. பாசுரம் முழுதினையும்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. அயர்த்தவள்
சுற்றும் பார்த்தற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘பின்னையும்’ என்று தொடங்கி.
|