முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
193

New Page 1

முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக, ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு. நின்றும் - 1‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை. கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் - 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே, இருந்த இருப்பாதல்; 3க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல். மணம் கூடியும் - பதினோராயிரம் ஆண்டு தன் 4படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.

    கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை - பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு, ‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, 5ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’ 6‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ என்னக் கடவதன்றோ? வண் தமிழ் நூற்க நோற்றேன் - திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார

_____________________________________________________

1. ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.

2. ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

3. ‘க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனை’ என்றது, முடி முதலானவற்றை. ஒப்பனை -
  அலங்காரம்.

4. படுக்கைப்பற்று - சீதனம். 

5. உலகு அவனுக்கு உரியது என்பதற்கு லௌகிக திருஷ்டாந்தம் காட்டுகிறார்
  ‘ஒருவன்’ என்று தொடங்கி. ஒற்றி நிலத்தில் கமுகு வைக்கமாட்டார்கள்;
  ஆகையாலே, அதனையே திருஷ்டாந்தமாக எடுக்கிறார்.

6. ‘ஆனால், இது அவனுடைய உத்தியான வனமோ?’ என்ன, ‘ஆம்’ என்று
  அதற்கு மேற்கோள் காட்டுகிறார், ‘பெய்த காவு’ என்று தொடங்கி. இது,
  திருவாய். 6. 3 : 5.