கஷ
கஷ்டப்பட்டு ஆராதிக்கப்படுமவன்
அல்லன். 1தான் காக்குமிடத்தில் இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே
வேண்டுவது. இதனால், ‘அந்தப் பிரளயம் தீர்த்தவனேகாணும் இந்தப் பிரளயத்துக்கும் கடவன்; நம்மோடு
ஒக்கப் பிரளயத்திலே அழுந்தும் புன்சிறு தெய்வங்களையோ பற்றுவது? வரையாதே எல்லாப் பொருள்களையும்
பாதுகாப்பவனாயுள்ளவனை அன்றோ பற்றத் தகுவது?’ என்கிறாள் என்றபடி.
பேர் சொல்லகிற்கில்
- திருப்பெயரைச் சொல்ல வல்லீர்கோளேயானால். ‘இப்படி 2நேர்த்தி அற்று
இருக்குமாகில் பலமும் அளவுபட்டு இருக்குமோ?’ என்னில், இவளைப் பெறுதிர் - அத்தேவதைகள் மாட்டு
நேர வேண்டுவன எல்லாம் நேர்ந்தாலும், ‘என் பயன்?’ என்று பிரயோஜனம் இல்லையாகச்
சொல்லிற்று; இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப்
பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம். ‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்;
3இல்லையாகில் இழக்குமித்தனை,’ என்றபடி.
(4)
392
இவளைப் பெறும்பரிசு
இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும்
கோவைச்செவ் வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு
அட்டபி ரான்திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு
நீர்இட் டிடுமின்; தணியுமே.
பொ-ரை :
‘ஐயோ! இவளைப் பெறுதற்குரிய வழி இந்த அணங்கு ஆடுதல் அன்று; குவளை போன்ற விசாலமான கண்களும்
கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயும் பசலை நிறத்தை அடைந்தாள். கவளத்தை உண்ணுகின்ற மதம்
பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்ற கண்ணபிரானுடைய திருப்பெயரைச் சொல்லிக்
_____________________________________________________
1. ‘ஆனால், பேர்
சொல்லுவான் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘தான் காக்குமிடத்தில்’ என்று
தொடங்கி.
2. நேர்த்தி - முயற்சி.
3. ‘பேர்
சொல்லகிற்கில்’ என்கையாலே, ‘சொல்லமாட்டாத போது விநாசம்’
என்கிறார், ‘இல்லையாகில்’
என்று தொடங்கி.
|