ஸ்ரீ
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’
என்கிறாள். ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள :
அவ்விரண்டனுக்கும் இவ்விரண்டனையுங்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.
‘இப்படிச் செய்தல் பரிஹாரம் ஆகுமோ?’ என்ன, தணியுமே - இவள் கண்ணும் விழித்து நிறமும்
வரும்படி காட்டித்தரக்கடவேன்.
(5)
393
தணியும் 1பொழுதுஇன்றி
நீர்அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது
இல்லை, பெருகும் இதுஅல்லால்;
மணியின் அணிநிற மாயன்
தமர்அடி நீறுகொண்டு
அணிய முயலின், மற்றுஇல்லை
கண்டீர்இவ்வணங்குக்கே.
பொ-ரை :
‘தாய்மார்களே, நீங்கள் தவிர்வது ஒரு காலம் இல்லாமலே அணங்கு ஆடுகின்றீர்கள்; வியாதியும்
மேலும் மேலும் மிகுகின்றது என்னும் இதுவேயல்லாமல் நீங்கிற்றில்லை; நீலமணி போன்ற அழகிய நிறம்
வாய்ந்த மாயனுடைய அடியார்களுடைய பாததூளியைக்கொண்டு அணிவதற்கு முயற்சி செய்தால், அதுவே இவள்
உற்ற நோய்க்கு அருமருந்தாகும்; அது ஒழிய இந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு பரிஹாரம் இல்லைகண்டீர்.
வி-கு :
‘அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர்; பிணியும் பெருகும். இது அல்லால் ஒழிகின்றது
இல்லை,’ என்க. நீறு - புழுதி; தூளி. மற்று - பிறிது என்னும் பொருளில் வந்தது. கண்டீர் -
முன்னிலையசை; தேற்றமுமாம்.
ஈடு :
ஆறாம் பாட்டு. 2இந்தப் பெரிய முயற்சி எல்லாம் வேண்டா; ‘தவளப்பொடி’ என்று
சொன்னது இன்னது என்று விசேடித்து, ‘அதனைச் செய்ய முயன்ற அளவிலே இவள் நோய் தீரும்,’ என்கிறாள்.
அன்னைமீர்! நீர்
தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர் - விலக்குவார் உளர் ஆகையாலே, ‘இன்ன போது தவிரச்
சொல்லுவர்கள்’ என்று அறியாமையாலே, உச்சி வீடு விடாதே அவர்கள் ஆடத் தொடங்கினார்கள்.
பிணியும்
_____________________________________________________
1. ‘பொழுதில்லை’ என்பதும்
பாடம்.
2. ‘மாயன்
தமரடி நீறுகொண்டு’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|