New Page 1
பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே
கூப்பிட, ஸ்ரீ சுமந்திரன், ‘அவரைப் பிரிந்தோம் என்று கூப்பிட வேண்டாகாணும்; தாமே வந்து புகுவர்காணும்,’
என்று தேற்றினான். சூதேந - சொன்ன வார்த்தை ‘நம்பத்தகுந்தது’ என்று கைக்கொள்ள வேண்டும்படி
அந்தரங்கன் ஆவது, சாரதிகள் சொல்லுவனவெல்லாம் நம்பத்தக்கன அன்றோ? சுயுக்தவாதிநா - அஃது
இல்லையேயாகிலும் வார்த்தையைக் கேட்டால், ‘இது அப்படியே’ என்று நம்பி ஓடுகிற சோகம்
தீரும்படி வார்த்தை சொல்ல வல்லன் ஆவது. நிவார்யமாணா -இவனாலே ‘இது வேண்டா’ என்று தடுக்கப்படாநிற்கச்செய்தேயும்.
சுதசோக கர்சிதா - இப்படி 1இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில் நீங்காதே
அன்றோ, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை? நெடு நாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால்
தரிக்கப் போகாதே! நசைவ தேவீவிரராம கூஜிதாத் - பிறர் கண்ணீரையும் மாற்றி, இதற்கு முன்பு
சோகமும் புதியது உண்ணாதே போந்தவள், கூப்பிடுகிற கூப்பீட்டினின்றும் ஓவிற்றிலள்; கூப்பிடுகிற
போதுதான் கேட்டார்க்கு அடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற்போலேகாணும் கூப்பிடுவது.
கூப்பிட்ட பாசுரம், பிரியேதி புத்ரேதிச ராகவேதிச - ‘பிரிந்தால் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு
இனியவரே! உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமையை நீக்கும் தன்மையையுடையவரே! எல்லாரையும்
பாதுகாக்கும் குடியிலே பிறந்து, பெற்ற தாயை நலியலாமோ!’ என்று அவள் கூப்பிட்டாற்போலே
இவரும் கூப்பிடுகிறார்.
399
சீலம் இல்லாச்
சிறியே னேலும்,
செய்வினை
யோபெரிதால்;
ஞாலம் உண்டாய்!
ஞான மூர்த்தி!
நாராயணா!
என்றுஎன்று
காலந் தோறும்
யான்இ ருந்து,
கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண
வாராய்;
கூவியும்
கொள்ளாயே.
பொ-ரை :
‘உலகத்தை எல்லாம் உண்டவனே! ஞானத்தையே வடிவாக உடையவனே! நாராயணனே!’ என்று என்று யான் இங்கே
_______________________________________________
1. இவனை -
சுமந்திரனை.
|