முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
368

என

என்கிறபடியே. விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலேபெறவேண்டும். 1‘ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை; ஒரு சர்வசத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை. அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.

(8)

429

கூட்டுதிநின் குரைகழல்கள்; இமையோரும் தொழாவகைசெய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்! அடியேனும் அஃதுஅறிவன்;
வேட்கைஎலாம் விடுத்துஎனைஉன் திருவடியே   சுமந்துஉழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.

    பொ-ரை : ‘ஞானமில்லாதவரேயாயினும், நீ உகந்தாரை’ ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிகளிலே கூட்டிக்கொள்ளுகின்றாய்; நீ உகவாதாரை, அவர்கள் தேவர்களேயாயினும், உன்னைத்தொழாதபடி செய்து விஷயங்களிலே திரியும்படி செய்கின்றாய்; அதனை அடியேனும் அறிவேன்: அரவணையாய்! வேட்கை எல்லாம் விடுத்து உன் திருவடிகளையே சுமந்து திரியும்படியாக, தன் முயற்சியால் ஒருவராலும் அடைய முடியாத திருவடிகளிலே என்னைச் சேர்த்தாய்; நான் பார்த்தேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘குரைகழல்கள் கூட்டுதி,’ என்க. பின்னர், ‘இமையோரும்’ என வருவதனால், இங்கு ‘ஞானமில்லாத சிறியாராயினும் அவர்களை’ எனச் செயப்படுபொருள் வருவித்து அதனைக் ‘குரை கழல்கள் கூட்டுதி’ என்றதனோடு முடிக்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 2இவர் இவ்வுலக வாழ்வினை நினைத்தமையால் வந்த துன்பம் எல்லாம் தீரும்படி, திருநாட்டில் இருந்த இருப்பைக்காட்டியருள, ‘கண்டு அனுபவிக்கப்பெற்றேன்,’ என்று மனம் நிறைவு பெற்றவர் ஆகிறார்.

    நின் குரைகழல்கள் கூட்டுதி - அறிவில்லாதவர்களாகவுமாம். நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக்

____________________________________________________

1. ‘விரோதிகளை அவனைப் பற்றியே போக்கிக்கொள்ளவேணும்’ என்பதற்கு
  ஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘ஒரு குருவி’ என்று தொடங்கி.

2. ‘வேட்கையெல்லாம் விடுத்து, கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை’ என்ற
  பதங்களைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.