என
என்கிறபடியே. விரோதியைப்
போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலேபெறவேண்டும். 1‘ஒரு
குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை; ஒரு சர்வசத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப்
பிணைத்த பிணையை. அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக்
கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.
(8)
429
கூட்டுதிநின் குரைகழல்கள்;
இமையோரும் தொழாவகைசெய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்!
அடியேனும் அஃதுஅறிவன்;
வேட்கைஎலாம் விடுத்துஎனைஉன்
திருவடியே சுமந்துஉழலக்
கூட்டரிய திருவடிக்கள்
கூட்டினைநான் கண்டேனே.
பொ-ரை :
‘ஞானமில்லாதவரேயாயினும், நீ உகந்தாரை’ ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிகளிலே கூட்டிக்கொள்ளுகின்றாய்;
நீ உகவாதாரை, அவர்கள் தேவர்களேயாயினும், உன்னைத்தொழாதபடி செய்து விஷயங்களிலே திரியும்படி
செய்கின்றாய்; அதனை அடியேனும் அறிவேன்: அரவணையாய்! வேட்கை எல்லாம் விடுத்து உன் திருவடிகளையே
சுமந்து திரியும்படியாக, தன் முயற்சியால் ஒருவராலும் அடைய முடியாத திருவடிகளிலே என்னைச் சேர்த்தாய்;
நான் பார்த்தேன்,’ என்கிறார்.
வி-கு :
‘குரைகழல்கள் கூட்டுதி,’ என்க. பின்னர்,
‘இமையோரும்’ என வருவதனால், இங்கு ‘ஞானமில்லாத சிறியாராயினும் அவர்களை’ எனச் செயப்படுபொருள்
வருவித்து அதனைக் ‘குரை கழல்கள் கூட்டுதி’ என்றதனோடு முடிக்க.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 2இவர் இவ்வுலக
வாழ்வினை நினைத்தமையால் வந்த துன்பம் எல்லாம் தீரும்படி, திருநாட்டில் இருந்த இருப்பைக்காட்டியருள,
‘கண்டு அனுபவிக்கப்பெற்றேன்,’ என்று மனம் நிறைவு பெற்றவர் ஆகிறார்.
நின் குரைகழல்கள்
கூட்டுதி - அறிவில்லாதவர்களாகவுமாம். நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக்
____________________________________________________
1. ‘விரோதிகளை அவனைப்
பற்றியே போக்கிக்கொள்ளவேணும்’ என்பதற்கு
ஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘ஒரு குருவி’ என்று
தொடங்கி.
2. ‘வேட்கையெல்லாம்
விடுத்து, கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை’ என்ற
பதங்களைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|