முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
423

1சர

    1சர்வேசுவரன் தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று, சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று, 2தன்படிகளைச் சொல்லி, ‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு, 3‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்தும பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே. 4‘என்னிடத்திலிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன; அநாதியான என்னிடத்தில் எல்லாம் இலயம் அடைகின்றன. யானே எல்லாப் பொருள்களுமாய் இருக்கிறேன்; யானே அழிவில்லாதவனும் முடிவில்லாதவனும் ஆகிறேன்; பரமாத்துமாவை ஆத்துமாவாகப் பெற்றுள்ளேன்,’ என்றான் பிரஹ்லாதாழ்வான். 5பிரஹ்லாதாழ்வான் பக்கல் பரத்துவம்

_____________________________________________________

1. ‘சர்வேசுவரன், தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று’ என்றது,
  ஸ்ரீ கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 20 முதல் 42 முடிய உள்ள
  சுலோகங்களைத் திருவுள்ளம் பற்றி.

2. ‘தன் படிகளைச் சொல்லி’ என்றது, ‘அஹம் ஏக: பிரதமம் ஆஸம் வர்த்தாமிச
  பவிஷ்யாமிச நாந்ய: கச்சின் மத்தோ வியதிரிக்த இதி’ (அதர்வசிகை) என்ற
  வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.

3. ‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்,’ இது, அதர்வசிகை.

  ‘ஸ :- அந்தச் சிவபிரான், அந்தராத் - தேக இந்திரியங்களைக் காட்டிலும்
  உள்ளே இருக்கிற ஜீவாத்துமாவாகிற தன்னினின்றும். அந்தரம் -
  பரமாத்துமாவை, பிராவிசத் - அடைந்தார். என்றது, ‘சிவபிரான் பரமாத்தும
  பாவத்தை அடைந்தார்’ என்பது கருத்து. ‘அன்றிக்கே, ஸ :- அந்தப்
  பரமாத்துமா, அந்தராத் - தேக இந்திரியங்களைக்காட்டிலும் உள்ளே
  இருக்கின்ற ஜீவாத்துமாவின், அந்தரம் - உள்ளே, பிராவிசத் -
  பிரவேசித்தார்,’ என்னலுமாம். என்றது ‘பரமாத்துமா சிவபிரான் உள்ளே
  பிரவேசித்தார்; ஆதலால், பரமாத்தும பாவத்தைச் சிவன் அடைந்தார்,’
  என்பது கருத்து.

4. ‘பரமாத்தும பிரவேசத்தாலே இப்படிச் சொன்ன பேர் உளரோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘என்னிடத்திலிருந்து’ என்று தொடங்கி.

  ‘மத்தஸ் ஸர்வம் அஹம் மபிசர்வம் சநாதநே
  அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:’

  என்பது, ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 19 : 95.

  ‘கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்’

  என்ற திருவாய்மொழி இங்கு அநுசந்தேயம்.

5. ‘பிரஹ்லாதாழ்வானைத் திருஷ்டாந்தமாகச் சொன்னதற்குக் கருத்து என்?’
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பிரஹ்லாதாழ்வான் பக்கல்’ என்று
  தொடங்கி.