முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
49

இவளுக

இவளுக்கு ஒரு துக்கத்தின் நினைவு இல்லை ஆதலின், உணர்ந்திருந்து பார்த்துக் கூறுகிற தன்னை ‘வல்வினையேன்’ என்கிறாள். மடம் வல்லி - ஒரு கொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள். 1‘தமப்பபனாரான ஜனகமஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் - பற்றிற்று விடாமை.

(1)

345

வல்லிசேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல்அணி நாறு துழாய்என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.

    பொ-ரை : செய்த தீவினையையுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய இடையையுடைய ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே சொல்லாநின்றாள்.

    வி-கு : ‘பாவை சொல்லும்’ என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள். ‘வாலறிவன் நற்றாள் என்றார் திருவள்ளுவனாரும்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற தன் உலகத்தைக் காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘அது உடல் அன்றாகில் தவிருகிறேன்; என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

_____________________________________________________

1. ஸ்ரீராமா. அயோத். 119 : 36. 

2. ‘ஆய்ச்சியர்தம்மொடு கொல்லைமை செய்து’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார். பேற்றுக்கு - அனுபவத்துக்கு. உடல் -
  காரணம். மேற்பாசுரத்தில் ‘மடவல்லி’ என்று தன்னைச் சொல்லி,
  இப்பாசுரத்தில் ‘வல்லிசேர் ஆய்ச்சியர்’ என்று கூறுவதனால்’ என்
  பருவத்தினையுடைய பெண்கள்’ என்கிறார்.