முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
5

ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள், கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்; ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால் நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

    விசேடக்குறிப்பு : நாயகம் - முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக. ‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.

    இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

    ஈடு : முதற்பாட்டில், 1‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்; ஆன பின்பு, 2‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ - ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே, அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

    ஒரு  நாயகமாய் - தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் 4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி. நிலை

_____________________________________________________

1. சார்வபௌமராய்ப் போந்த இராஜாக்கள் - ஒரு நாயகமாய் உலகு உடன்
  ஆண்ட சக்கரவர்த்திகள்.

2. ஸ்ரீ ராமாயணம் யுத்தகாண்டம். இது, மண்டோதரி வார்த்தை.

3. தைத்திரீய நாராயண. உப. 11 : 8.

4. பௌண்ட்ரக வாசுதேவன்:

  ‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே!
  சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
  அங்கவை விடுக லானேல் ஆடமர்க் கெழுக’ என்னா
 
வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’

  என்பது பாகவதம். இவன் சரிதையைப் பாகவதம் பத்தாங்கந்தம் 88-ஆம்
  அத்தியாயத்தால் உணரலாகும்.