உப
உபகோசல சாண்டில்யாதி
வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.
1பேதங்கள்
சொல்லி - தாங்கள் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி; என்றது, சீல குணத்தை
அனுபவித்து, இதுவும் ஒரு குணமே! இது போலேயோ வீர குணம்!’ என்றாற்போலே சொல்லுதல் என்றபடி.
பிதற்றும் - அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வரசந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள்.
பிரான் பரன் - 2அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது,
‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’ என்கிறபடியே,
இக்குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே
‘பிரான்’
என்கிறாள் என்றபடி.
பரன் பாதங்கள்மேல்
அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் - ‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே, மிக்க
சீர்த்தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சார்த்தினதாய், அதனாலேயே மிகவும்
விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள். ஊழ்வினையேன் - 3வந்தது
அடைய முறையாம்படியான பாவத்தைப் பண்ணின யான். ஊழ் - முறை. தடந்தோளியே - 4இப்படிக்
கைவிஞ்சின
_____________________________________________________
1. பேதம் - ஏற்றம்; அதிசயம்.
ஜ்வரசந்நி பதிதர் -
ஜன்னி சுரத்தில் விழுந்தவர்கள். ‘பிதற்றுதல்’
என்றது, தான் அனுபவிக்கும் குணத்திற்கு ஏற்றம்
சொல்லப்புகுந்து, பிறர்
அனுபவிக்கும் குணத்திற்கு ஏற்றத்தைச் சொல்லிவிடுதல்.
2. பிரான் - உபகாரகன்.
அந்த உபகாரத்தைக் காட்டுகிறார், ‘அவர்களுக்கு’
என்று தொடங்கி. ‘இமையோர்தமக்கும்’ என்று
பாசுரத்தாலே தரித்திருந்து
அனுபவிக்க ஒண்ணாமை சொல்லுகையாலே, அதனைத் தரித்திருந்து
அனுபவிக்கும்படி
செய்து அனுபவிப்பிக்கையாலே உபகாரகன் என்றபடி.
‘இமையோர் தமக்கும்’ என்ற பாசுரம், திருவிருத்தம்,
98.
3. வந்தது அடைய - வந்த
துக்கமுழுதும்.
4. ‘தடம்’ என்பது, அழகால் வந்த பரப்பைச் சொல்லுகிறது. ‘கோதில்
வண்புகழ்’ ஆகையாலே, ‘குணங்களுக்கு
இருப்பிடமான’ என்கிறார்.
|