முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
63

எப

எப்போது?’ என்பாள், ‘வாள் நுதலீர்’ என்று விளிக்கிறாள். என் மடக்கொம்பே ‑ 1என்னைப் பிரியாமல் எல்லா அளவிலும் விகாரம் இல்லாதவளாய் இருக்குமவள் படும் பாடே இது!

(7)

351

கொம்புபோல் சீதை பொருட்டு, இலங் கைநகர்
அம்புஎரி உய்த்தவர் தாள்இணை மேல்அணி
வம்புஅவிழ் தண்அம் துழாய்மலர்க் கேஇவள்
நம்புமால்; நான்இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?

    பொ-ரை : பெண்களே! என் மகளாகிய இவள், பூங்கொம்பு போன்ற சீதாபிராட்டி காரணமாக இலங்கை நகரிலே நெருப்பைச் சொரிகின்ற அம்பைச் செலுத்திய ஸ்ரீராமபிரானுடைய இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த வாசனையோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலரையே விரும்பாநின்றாள்; இதற்கு நான் என்ன செய்வேன்?

    வி-கு : ‘நங்கைமீர்! இவள் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி துழாய் மலர்க்கே நம்பும்; என் செய்கேன்?’ எனக்கூட்டுக. அம்பு எரி -ஆக்நேய அஸ்திரமுமாம். நம்புதல் - விரும்புதல்; ‘நம்பும் மேவும் நசையா கும்மே,’ என்பது தொல்காப்பியம் (சொல்).

    ஈடு : எட்டாம் பாட்டு. 2‘ஸ்ரீஜனகராஜன் திருமகளுடைய விரோதியைப் போக்கின சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்’ என்கிறாள்.

    கொம்பு போல் - ‘வஞ்சிக்கொம்பு போலே’ என்னுதல்; 3‘அநந்யா - வேறுபட்டவள் ஆகேன்’ என்கிறபடியே, ஒரு

_____________________________________________________

1. கொம்பு மரத்தைப் பிரியாமல் இருப்பதாதலின், அதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘என் கொம்பு’ என்பதற்கு ‘என்னைப் பிரியாமல்’ என்று அருளிச்செய்கிறார்.
  ‘மடம்’ என்பதற்கு பாவம், ‘எல்லா அளவிலும்’ என்று தொடங்குவது.
  மடமை - பற்றியது விடாமை.

2. ‘சீதைபொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர்’ என்றதனைக்
  கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. ஸ்ரீராமா. சுந். 21 : 15. ‘சூரியனுடைய ஒளியைப் போன்று ஸ்ரீராகவனை
  விட்டுப் பிரியாமல் இருப்பவள் நான்,’ என்பது அப்பகுதியின் பொருள்.
  கொம்பு என்பது மரத்தினது ஓர் உறுப்பு ஆகையாலே, ‘ஒரு பொருளில்
  ஒரு பகுதியான உறுப்பு’ என்கிறார்.