New Page 2
சொல்லுகிறது; சாத்துவிக
அகங்காரத்தின் காரியம், பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான
ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும், இராஜச அகங்காரம்; ஆக பதினோரிந்திரியங்களையும்,
குணங்களோடு கூடிய ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது.
இரண்டு சுடராய் -
1‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே,
படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது. இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும்
உபலக்ஷணம். அருவாகி - 2‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள்
அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள்
பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ்வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து
நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ‘நன்று; மேலே, அசித்தை அருளிச்செய்தாராதலின், அங்கு ‘அரு’
என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல் ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், 3‘இந்த
ஆத்துமாக்களை எல்லாம்
_____________________________________________________
1. தைத்திரீய உபநிட,
1.
‘ஐந்து பூதமாய்’ என்றது
முடிய, சமஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தது.
‘இரண்டு சுடராய்’ என்றது முதல் வியஷ்டி சிருஷ்டியை
அருளிச்செய்தபடி.
சமஷ்டி - கூட்டம். வியஷ்டி - வேறு வேறு.
2. தைத்திரீய ஆனந்.
6.
3. சாந்தோக்ய உபநிட,
6 : 3.
அரு என்பதற்கு ஆத்துமா
என்று பொருள் கூறில், அநுப்பிரவேசம்
சித்தியாமையாலும், அநுப்பிரவேசத்தைச் சொல்லுகிறவிடத்தில்
ஜீவனுக்கு
அந்தரியாமியாய் இருக்கிற இறைவனுக்கு அநுப்பிரவேசமாகையாலே
ஆத்துமா சித்திக்கையாலும்
அநுப்பிரவேசத்தையே சொல்லுகிறது என்றபடி.
|