முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
214

படியான அழகு. திருக்குறுங்குடி நம்பியை-பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு. 1நம்பியை-குணங்களில் நிறைவின்மை உண்டாய்த்தான் மீளுகிறதோ. நான் கண்டபின்-இவ்விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ. சங்கினோடும்-2 ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடே விசேடித்து ஒரு சம்பந்தம் உண்டுகாணும் இவளுக்கு; திருவாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.

(1)

488

    என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
    தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
    மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
    மன்னு பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.

   
பொ-ரை :- என்னை முனிந்துகொள்ளாமல் என் நெஞ்சினாலே அநுபவித்துக் காண்பீராக; தெற்குத் திக்கிலேயுள்ள சிறந்த சோலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பின்னர், மின்னுகின்ற பூணுநூலும் குண்டலங்களும் திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரியபிராட்டியாரும் ஸ்ரீவத்சமும் நிலைபெற்ற ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் அங்கு அங்கே வந்து நிற்கின்றன.

    வி-கு :-
நோக்கிக் காணீர்: நோக்கல் நோக்கம். அநுபவித்து அறிமின் என்பது பொருள். முனியாதே காணீர் என்க. கண்டபின் எங்கும் நின்றிடும் என்க. திருமறு - அழகிய மறுவுமாம்.

    ஈடு :-
இரண்டாம் பாட்டு. 3நம்பியுடைய தோள் அழகும் ஆபரணங்களின் அழகும் எல்லாத் திக்குகளிலும் நின்று நலிகின்றன என்கிறாள்.

    நாங்களும் நம்பியை அநுபவித்தே பெண் தன்மை கெடாமல் இருக்கின்றிலேமோ? என்ன, என் நெஞ்சினால்

____________________________________________________

1. நம்பி-பூர்ணன்; நிறைந்தவன்.

2. முன்னே சங்கினை அருளிச்செய்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ
  பாஞ்சசன்யத்தோடே’ என்று தொடங்கி.

3. திருப்பாசுரத்தின் பின் இரண்டு அடிகளையும் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். “எங்கும் நின்றிடும்” என்றது, உருவெளிப்பாடு
  ஆகையாலே, அது பாதகமானமையைப் பற்ற ‘நலிகின்றன’ என்கிறாள்.