|
489
489
நின்றிடும் திசைக்கும்
நையும்என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும்வாளும்
சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக்
கண்ணுள்நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.
பொ-ரை :- செயல் அற்று நிற்பாள், பின் அறிவு கலங்குவாள்,
பின் வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; மலைகளைப்போன்று மாடங்கள்
உயர்ந்து காணப்படுகின்ற திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னர், வெற்றி பொருந்திய
வில்லும் தண்டமும் வாளும் சக்கரமும் சங்கமும் ஒருபடிப்பட நின்று கண்களுள் தோன்றி நீங்குகின்றன
இல்லை; நெஞ்சுக்குள்ளேயும் நீங்குகின்றன இல்லை. என் செய்வேன்?
வி-கு :-
என்று முனிதிர்: கண்டபின் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்கா என்க.
ஈடு :- மூன்றாம்
பாட்டு. 1நம்பியுடைய திவ்விய ஆயுதங்களின் சேர்த்தி அழகு, உள்ளும் புறம்பும் ஒக்க
எப்பொழுதும் தோன்றாநின்றது என்கிறாள்.
நின்றிடும் திசைக்கும்
கையும் - 2“ஸ்ரீராமபிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப்பட்டதாகவும்
பிளக்கப்பட்டதாகவும் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே,
இராமபாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய 3அழகுகளும்.
4ஒன்று
_____________________________________________________
1. பாசுரத்தின் பின் இரண்டு
அடிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. “சிந்நம்பிந்நம் ஸரை:
தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ரபீடிதம்
பலம் ராமேண தத்ருஸு:
ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
3. ‘அழகுகளும்’ என்றது,
ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகுகளும்
என்றபடி.
4. அறிவு
குடிபோனால் நையும்படி என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஒன்று’ என்று தொடங்கி.
|