|
New Page 1
போலே காணும் இவள்தான்.
1“எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு
முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். 2இவள்
துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள். மன்னுமாடம்
- 3“கண்ணபிரானுடைய திருமாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை”
என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங்கூட அழியாது என்றிருக்கிறாள். நான் கண்டபின் -
4பிற்காலியாதபடியான நான் கண்டபின். என்றது, நாணம் நீங்கப் பெற்ற நான் கண்டபின்
என்றபடி. சென்னி நீண்முடி ஆதியாய உலப்பு இல் அணி கலத்தன் - தலையான முடி தொடக்கமான
முடிவில்லாத ஆபரணங்களையுடையவன். அன்றிக்கே, சென்னியில் தரித்திருக்கிற ஆதிராஜ்ய சூசகமான
திருமுடி தொடக்கமான எண்ணிறந்த திவ்விய ஆபரணங்களையுடையவன் என்னுதல். 5சேர்த்தி
இருக்கிற
___________________________________________________
1. ஒருவர் முன்பும் நின்று
அறியாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எந்தச்
சீதாபிராட்டி’ என்று தொடங்கி.
“யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதைராகாஸகைரபி
டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதாஜநா:”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 :
8.
2. இவள் உகப்பைப் பின்செல்கின்ற
தோழிமார்கள், தாய்மார்களைப் போன்று
பொடியலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இவள்
துணிவை’ என்று தொடங்கி. என்றது, “அதிமாத்ர பிராவண்யம் ஸத்தா
ஹாநி கரம்-மிக அதிகமான
ஈடுபாடானது சத்தையைக் கெடுத்துவிடும்”
என்னுமதனாலே பொடிகிறார்கள் என்றபடி.
3. மன்னுதல் என்பதற்குப்
பொருள், நிலைத்திருத்தல் என்பது ஆகையாலே,
அதனை விரித்து அருளிச்செய்கிறார் ‘கண்ணபிரானுடைய’
என்று தொடங்கி.
“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம்
த்வாரகாம்ச மஹோததி:
வாசுதேவ க்ருஹம் து ஏகம்
ந ப்லாவயதி ஸாகர:”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.38:9.
4. ‘முன்நின்றாய்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றிப் ‘பிற்காலியாத’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
5. “கலத்தன்”
என்னாமல், “அணிகலத்தன்” என்று விஷேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘சேர்த்தி’ என்று
தொடங்கி. அன்றிக்கே, ‘சேர்த்தி’
என்று தொடங்கும் வாக்கியம், “கன்னல் பால்
|