முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
333

New Page 1

‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன, ‘நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், ‘இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

    ஆராஅமுதே -
1“ஸஹபத்நியா - பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா - பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் - நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே - இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.

____________________________________________________

1. இத்திருப்பெயரின் இனிமையின் மிகுதி ஈச்வரனுக்கும் தனியே
  அநுபவிக்கப் போகாது என்று, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
  ‘ஸஹபத்நியா’ என்று தொடங்கி.

  “கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ:
   ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.

2. “ஸஹபத்நியா” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஆழங்காலிலே’
   என்று தொடங்கி. “கொம்பு போற் சீதை” (திருவாய். 4. 2 : 8.)
   என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘கொம்பு’ என்கிறார். அதனை விவரணம்
   செய்கிறார் ‘கிண்ணகத்தில்’ என்று தொடங்கி. கிண்ணகம்-
   ஆற்றுப்பெருக்கு.

3. நியதியாவது - ஐம்பொறிகளையும் அடக்கிய தன்மை.