முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
366

527

527

    களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்
    வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
    தளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது
    இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே.

   
பொ-ரை :- வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக வுடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! மாமாயனே! என் துன்பத்தைப் போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.

    வி-கு :-
“துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் - துணை. இளைத்தல் - நெகிழ்தல்.

    ஈடு :-
எட்டாம் பாட்டு. 1“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும், ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சாநின்றேன்; அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் - நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், 2“நீயே உபாயமாக

_____________________________________________________

1. “ப்ரஸக்தஸ்யஹி ப்ரதிஷேத:” என்கிற நியாயத்தாலே, இப்போது
  ‘விஸ்வாசம் குலையாதபடி செய்ய வேணும்’ என்கைக்குக் காரணம் யாது?
  என்ன, அதற்கு விடையருளிச்செய்யுமுகத்தால் அவதாரிகை
  அருளிச்செய்கிறார். “இளையாதுனதாள்” என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று தொடங்கி அருளிச்
  செய்கிறார். ப்ரஸக்தஸ்யஹி ப்ரதிஷேத: என்ற நியாயமாவது, உண்டாவதற்கு
  ஏது இருந்தால் அல்லவா விலக்கு வேண்டும் என்பது.

2. “துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற
   பிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.

  “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”

  என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்
  குறை இல்லை என்றபடி.