முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
4

New Page 1

443

        கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
        பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
        மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
        ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.

    பொழிப்புரை : கையிலே பொருந்திய சக்கரத்தையுடைய என் கருமாணிக்கமே! கண்ணபிரானே! என்று என்று மிக்க பொய்யைச் சொல்லி, புறவிஷயங்களிலே மூழ்கி, உண்மையான பேற்றினைப் பெற்றுவிட்டேன்; உன்னுடைய திருவருள் கிடைக்கின்ற காலத்தில் அதனைத் தடை செய்வார் யாவர்? ஐயோ! இனிப் போவாயேயானால் அறையோ!’ என்கிறார்.

    விசேடக் குறிப்பு :
கைம்மை - பொய். ஆடி - விளையாடி. ‘மூழ்கி’ என்னலுமாம். ‘பெற்றொழிந்தேன்’: ஒருசொல். வாய்க்கின்று -  வாய்க்குமிடத்து. இது, வினையெச்சம்.

    இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

    ஈடு :
- முதற்பாட்டு. 1என் பக்கல் உள்ளது மனத்தொடு படாத வார்த்தையாக இருக்க, இதனை மனத்தொடு பட்டு வந்த வார்த்தையாகக்கொண்டு விரும்பி, ‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான பேற்றினைச் செய்து கொடுத்தான் என்கிறார்.

    கைஆர் சக்கரத்து-2வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று. 3இதுதான் ஆபரணமுமாய் வினைத்தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது. ஒரு கைக்குப் படையாய்

_______________________________________________

1. திருப்பாசுரத்தில், “பொய்யே கைம்மை சொல்லி” “மெய்யே
  பெற்றொழிந்தேன்” என்பனவற்றைத் திருவுள்ளம்பற்றி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. “ஆர் கை சக்கரம்” என்று கூட்டி ‘வெறும் புறத்திலே’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். ஆர் - அழகு.

3. ‘திருவாழி, மனத்தினைக் கவரக்கூடியதாக இருக்குமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி. வினைத்தலை -
  போர் செய்யுமிடம். கை என்பது, சிலேடை: