முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
441

வளர

வளர்ந்தவாற்றிலே ஏறப்போமித்தனையன்றோ. 1“சீராற் பிறந்து” என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம். 2‘பிறந்தவாறு’ அவனே செய்கையாலே இவர்க்கு அங்குச் செய்யலாவதில்லை. இனி, 3அநுகூலர்க்குக் கண்டு பரிவதற்கும் விஷயமுள்ளது வளர்ந்தவாற்றிலேயன்றோ, அவ்வளர்ந்தவாறுதான் இருக்கிறபடி சொல்லுகிறார்.

    வதுவை வார்த்தையுள் - ‘எருதுகள் ஏழனையும் கொன்றவர்க்கு இவளைக் கொடுக்கக்கடவோம்’ என்று பிறந்த பிரசித்தி. வதுவை-விவாகம். ஏறு பாய்ந்ததும்-ஏறுகளின்மேல் விழுந்த படியையும். 4இவர்க்கு யமன் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று இருக்கிறது, பொய்கையிலே பாய்ந்தாற்போலே இரா நின்றதாயிற்று

_____________________________________________________

  யிருக்கும் என்றபடி. என்றது, இப்படியே பரிய வேண்டியிருக்கும் என்றபடி.
  அவ்வருகு - மற்றை அவதாரங்களில். அடியில்-பிறந்தவாற்றில். மோஹிக்கச்
  செய்கையாலே அடியில் இழியமாட்டார் என்பது.

1. மற்றை அவதாரங்களும் இத்தன்மையனவாயிருக்கும் என்பதற்கும் பிரமாணம்
  காட்டுகிறார் ‘சீராற்பிறந்து’ என்று தொடங்கி.

  சீரால் பிறந்து சிறப்பால் வளராது
  பேர்வாம னாகாக்கால் பேராளா! - மார்பாரப்
  புல்கிநீ உண்டுமிழ்ந்த பூமிநீர் ஏற்பரிதே?
  சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.

  என்பது, பெரிய திருவந்தாதி, 16.

2. மோஹிக்கச் செய்கையாலே அடியில் இழிய மாட்டார் என்று மேலே ஒரு
  கருத்து அருளிச்செய்து, பிறந்தவாறு அவனே செய்ததாகையாலே பரிய
  விஷயம் இல்லாமையாலும் அடியில் இழியமாட்டார் என்று வேறும் ஒரு
  கருத்து அருளிச்செய்கிறார் ‘பிறந்தவாறு’ என்று தொடங்கி. ‘அவனே’ என்ற
  ஏகாரம் கர்மத்தை விலக்குகிறது.

3. இங்குப் பரியத்தக்கது உண்டோ? என்ன, ‘அநுகூலர்க்கு’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. “பாய்ந்ததும்” என்றதற்கு, மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘இவர்க்கு’
  என்று தொடங்கி. என்றது, அவன் சௌகுமார்யத்தையும் அவற்றின்
  கொடுமையையும் நினைக்கையாலே, யமன் வாயிலே விழுந்தாற்போலே
  இருந்தது இவர்க்கு; அவனுக்கு அவளுடைய கலவிக்குக் காரணமாகையாலே
  பொய்கையிலே பாய்ந்தாற்போலே சுகரூபமாய்த் தோன்றியது என்றபடி.