முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
202

இன

இனி, இதனை முறித்துக் காரியம் கொள்ளுவோம் என்று பொடிபடுத்தினான். உட்பட மற்றும் பல - இப் புடையிலே பகைவர்களை அழித்தல் பலவே அன்றோ. அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே - பரப்பையுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே. பகல் இராப்பரவப் பெற்றேன் - 1நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும் இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு, இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ? பரிவு - துக்கம். அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.

(6)

592.

    மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
    தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
    புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
    நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.

   
பொ-ரை :- மனத்தில் துக்கத்தோடே தாழ்ந்த மனித வர்க்கத்தில் தனக்கு வேண்டிய உருவினைக்கொண்டு தான் அவதரித்து, தான் தனது சீற்றத்தினை முடிக்கும், புனத்துழாயினை முடியிலே தரித்த மாலை பொருந்திய மார்பினையுடையவனான என் அப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே நினைக்கின்ற மனத்தினையுடையேன்; இனி நீண்ட பெரிய உலகத்தில் எனக்கு ஒப்பாவார் யாவர்?

    வி-கு :- அழுக்கு மானிடச் சாதியில் தனக்கு வேண்டுருக்கொண்டு தான் மனப்பரிப்போடு பிறந்து என்க. புனம் துழாய்மாலை முடிமார்பன் எனக் கூட்டலுமாம், சீற்றத்தினை முடிக்கும் என்னப்பன் என்க.

    ஈடு :- ஏழாம்பாட்டு. 2தன்னை அடைந்த அடியார்களைப் பிரதிகூலர் நலியுமதனைப் பொறுக்கமாட்டாமல் அவதரித்து அவர்களை அழியச்செய்யும் செயல்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியின் நிகர் இல்லை என்கிறார்.

 

1. “பகல் இரா” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’
  என்று தொடங்கி. அபிமதவிஷயங்கள் - பெண்கள். ‘கூறிட்ட காலம்’
  என்றது, அபிமதவிஷயங்களுக்குக் கொடுக்கைக்கு உறுப்பாகப் பொருளை
  ஈட்டுதற்குப் பகலும், அவற்றை அநுபவிக்கைக்கு இரவுமாகப் பிரிக்கப்பட்ட
  காலம் என்றபடி.

2. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.