616
616
மாண்பமை கோலத்துஎம்
மாயக் குறளற்கு
சேண்சுடர்க்
குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம்
காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை
தோற்றது பொற்பே.
பொ-ரை :- அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய
வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு,
காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய, ஆபரணங்களைத் தரித்த மெல்லிய
முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.
வி-கு :-
தோற்றம் - தோன்றுதல்; அவதாரத்தைக் குறித்தபடி
காகுத்தன் - ககுஸ்தவம்சத்தில் பிறந்தவன். நம்பி - பூர்ணன்.
ஈடு :-
ஒன்பதாம்பாட்டு. 1ஸ்ரீ வாமனம் முதலிய
அநேக அவதாரங்களிலே அகப்பட்டு இவள் தன் அழகினை இழந்தாள் என்கிறாள்.
மாண்பு அமை கோலத்து
எம் மாயக் குறளற்கு - 2அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய
ஸ்ரீ வாமனனுக்கு. மாண்பு - அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம். சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு
- 3அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலைபோலே
அழகிய ஒளியையுடைய வடிவினையுடையவனுக்கு. காண் பெரும் 4தோற்றத்து - கண்களுக்கு இனியதாய்
அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் - அழகு. அன்றிக்கே,
“ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவ
1. “மாயக் குறளற்கு” என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘அழகு சமைந்த ஒப்பனை’
என்றது, பூணுநூல், மான்தோல், தருப்பை
முதலியவற்றை. வேடம் - விக்கிரஹம்.
3. ‘அடியிலே’ என்றதற்கு,
முதலில் என்றும், வேரிலே என்றும் பொருள்.
4. “தோற்றம்” என்பது அழகு;
அது, இங்கு விக்கிரஹத்தைக் காட்டுகிறது.
இரண்டாவது பொருளில் “தோற்றம்” என்றது, அவதாரத்தினை.
அதனை
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
“ஜந்ம ராமஸ்ய ஸுமஹத்
வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம்
க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”
என்பது, ஸ்ரீராமா. பால, 3
: 10.
|