New Page 1
கொண்டு, பிரிவுக்குச்
சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர்
அருளிச்செய்வர். மாற்றம் கொண்டருளீர்- ஒரு வார்த்தை கொண்டு வந்தருளவேண்டும். எப்படிப்பட்ட
வார்த்தை கொண்டு வர எனின், என்நிலை இருந்தபடி கண்டீர்கோளே, இது தீர்வது ஒருவழி நீங்களே தேடிக்கொண்டு
வந்து சொல்லுங்கோள். 1“காணப்பட்டாள் சீதை” என்றாற்போலே. மையல் தீர்வது
ஒருவண்ணம் மாற்றம் கொண்டருளீர் - என்கிலேசம் தீர்வது ஒருபிரகாரம் வார்த்தைகொண்டு வந்தருளிச்செய்யவேண்டும்.
2தூதுவிடுகிற தான் ஜனகராஜன் திருமகளாகவுமாம், விடப்படுகிறவை திர்யக்குகளையாகவுமாம்,
பகவத் விஷயத்தில் சேர்க்கின்றவர்களாயிருப்பாரை இங்ஙன் அல்லது சொல்லொண்ணாது காணும்.
(6)
559.
ஒருவண்ணம் சென்று புக்கு
எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செருஒண் பூம்பொழில்சூழ்
செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கருவண்ணம் செய்யவாய்
செய்யகண் செய்யகை செய்யகால்
செருஒண் சக்கரம் சங்குஅடையாளம்
திருந்தக்கண்டே.
1. இது தீர்வது ஒரு வழி தேடிக்கொண்டு
வந்து சொல்லுகையாவது ஏன்?
என்ன, ‘காணப்பட்டாள்’ என்று தொடங்கி விடை அருளிச்செய்கிறார்.
“ஸ: அபிகம்யமஹா
த்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா
த்ருஷ்டா ஸீதேதி தத்வத:”
என்பது, ஸ்ரீராமா. பால. 1
: 78.
கண்டனன் கற்பினுக்கு
அணியைக் கண்களால்;
தெண்டிரை
யலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக!
இனித் துறத்தி; ஐயமும்
பண்டுள துயரும்
என்று அநுமன் பன்னுவான்.
என்பது, கம்பராமாயணம்.
2. ‘சொல்லீர்’
என்னாதே, “அருளீர்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘தூதுவிடுகிற’ என்று தொடங்கி. முதற்பத்து
ஈட்டின் தமிழாக்கம், 148-ஆம்
பக். பார்க்கத்தகும்.
3. பெரியவனை மாயவனைப்
பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை
விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும்
திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன
கண்ணே!
கண்ணிமைத்துக்
காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!
என்பது, சிலப்பதிகாரம்.
|