முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

694

மூன்றாந்திருவாய்மொழி - பா. 10

149

                  694

        நகரமும் நாடும் பிறவும்தேர்வேன்
             நாண்எனக்கு இல்லைஎன் தோழிமீர்காள்!
        சிகர மணிநெடு மாடநீடு
             தென்திருப் பேரெயில் வீற்றிருந்த
        மகர நெடுங்குழைக் காதன்மாயன்
            நூற்று வரையன்று மங்கநூற்ற
        நிகரில் முகில்வண்ணன் நேமியான்என்
             நெஞ்சங் கவர்ந்துஎனை ஊழியானே.

    பொ - ரை : என்னுடைய தோழிமீர்காள்! நகரங்களிலும் நாடுகளிலும் பிற இடங்களிலும் தேடுவேன்; எனக்கு நாணம் இல்லை; ‘என்னை?’ எனின், சிகரங்களையுடைய அழகிய நீண்ட மரடங்கள் நிலைத்திருக்கின்ற தென்திருப்பேரெயிலில் எழுந்தருளியிருக்கின்ற மகர நெடுங்குழைக்காதனும் மாயனும் துரியோதனாதியர்கள் அன்று அவியும்படியாபக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும் நேமியானுமான எம்பெருமான் என் மனத்தினைக் கொள்ளைக்கொண்டு எத்தனை ஊழிக் காலத்தையுடையான்?

    வி - கு :
‘மகர நெடுங்குழைக்காதன்’ என்பது, அந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருப்பெயர். ‘எனை ஊழியான்’ என்பது, ‘அவன் என் மனத்தினைக் கவர்ந்து எத்தனை ஊழிக்காலமாயிற்று?’ என்றபடி.

    ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள் சொல்ல ‘அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.

    நகரமும் நாடும் பிறவும் தேர்வன்-‘உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி சொல்லுகிறார்களே!’ என்ன, ‘எனக்குதான் தேட்டம் அவனேயோ? நகரம், நாடு பத்தநம் முதலானவைகள், இவற்றிலுள்ளாருடைய

_______________________________________________________________

1. ‘நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். இருந்ததே குடியாக-குடி இருக்கிற பேரெல்லாரும்.