முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

184

திருவாய்மொழி - ஏழாம் பத்து

‘இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்; ‘கழுத்திலே கயிறு இட்ட பின்புகாண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே. ‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும், தாங்கள் உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக்கொண்டு. ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் தங்களைக்கொண்டு தப்புவர்கள்; ‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே, அடையத் தக்கவன் இவனே; அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.

(8)

                    704

        அன்றுமண் நீர்எரி கால்விண் மலைமுதல்
        அன்று சுடர்இரண் டும்பிற வும்பின்னும்
        அன்று மழைஉயிர் தேவும்மற் றும்அப்பன்
        அன்று முதல்உல கம்செய் ததுமே.

   
பொ-ரை : அப்பன் உலகத்தைப் படைத்ததும் ஆதியான சிருஷ்டி காலத்திலே; பூமியும் தண்ணீரும் நெருப்பும் காற்றும் ஆகாசமும் மலை முதலான பொருள்களும் ஆகிற இவற்றைப் படைத்ததும் அக்காலத்திலே; சூரிய சந்திரர்களையும். பிற பொருள்களையும் படைத்ததும் அக்காலத்திலே; அதற்கு மேலே, மழையையும் உயிர்களையும் தெய்வங்களையும் பிற பொருள்களையும் படைத்ததும் அக்காலத்திலே.

    ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1படைப்பும் உலகத்தாரால் செய்யப்படுவது அன்றிக்கே வேறுபட்டது ஒரு செயல் ஆகையாலே, அதனையும் வெற்றிச்செயலாக அருளிச்செய்கிறாராகவுமாம். அப்பன் முதல் உலகம் செய்ததும் அன்று - மஹோபகாரகன் முதலிலே உலகத்தை உண்டாக்கிற்றும் ஆதியான படைப்புக் காலத்திலே. அதற்குக் காரணமாக ‘மண் நீர்’ என்பது முதலாக அருளிச்செய்கிறார். அன்றிக்கே, முன்னும் பின்னும் கிருஷ்ணனுடைய செயலைப் பற்றி அருளிச்செய்கையாலே, ‘வாணனைத் தண்டித்த அன்றுகண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே

______________________________________________________________

1. இத்திருப்பாசுரத்திலே சிருட்டியை அருளிச்செய்வதற்கு இரண்டு வகையாகக்
  கருத்து அருளிச்செய்கிறார்: முதல் அவதாரிகை, இத்திருவாய்மொழியின்
  முன்னுரையிற்கூறிய ‘பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்க’ என்றதற்குச் சேரும்.