முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இங

ஆறாந்திருவாய்மொழி - பா. 4

263

இங்ஙனே இருந்த பின்பு, உன்னை எங்குத் தலைப்பெய்வனே-யான் ஓர் உபாயத்தைச் செய்து உன்னை எங்கே வந்து கிட்டப் புகுகிறேன்? என்னாலே வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ?

(3)

                           721 

        எங்குத்தலைப் பெய்வன்நான்! எழில்மூ வுலகும் நீயே
         1
அங்குஉயர் முக்கண்பிரான் பிரம பெருமான் அவன்நீ
        வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம்நீ
        கொங்கலர் தண் அந் துழாய்முடி என்னுடைக் கோவலனே!

   
பொ - ரை : தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய என்னுடைய கோபாலனே! அழகிய மூன்று உலகங்களும் நீ இட்ட வழக்கே; அவ்வுலகங்களிலே ஞானம் சத்தி முதலியவற்றால் உயர்ந்த மூன்று கண்களையுடைய சிவனும் அவனுக்குத் தந்தையாகிய பிரமனும் அவனும் நீ இட்ட வழக்கு; கொடிய கிரணங்களையுடைய வச்சிராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீ இட்ட வழக்கு; இங்ஙனம் இருக்க, நான் உன்னை எங்கே வந்து கிட்டுவேன்?

    வி - கு :
‘பெருமானாகிய பிரமன் அவன்’ என்க, கோவலன் என்பது, ‘கோபாலன்’ என்ற சொல்லின் சிதைவு என்பர் அடியார்க்கு நல்லார்.

    ஈடு : நான்காம் பாட்டு. 1மேற்பாசுரத்தில், ‘அவர்கள் சொரூபம் அவன் அதீனம்’ என்றது; அந்தச் சொரூபத்தைப் பற்றி இருப்பன சில உயர்வுகள் உளவே அன்றோ? அவையும் அவனுக்கு அதீனங்கள் என்கிறது இதில்.

    2
எங்குத் தலைப்பெய்வன் நான் - 3வலி இல்லாதான் ஒருவனை ‘மலையைத் தாங்கு’ என்றால், அவனாலே அது செய்து தலைக்கட்டப்

_____________________________________________________________

1. திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. துன்பத்தின் மிகுதியாலே மீண்டும், ‘எங்குத் தலைப்பெய்வன்?’ என்கிறார்.

3. ‘நான் எங்குத் தலைப்பெய்வன்?’ என்று தம்முடைய அசத்தியைச்
  சொல்லுகிறவருடைய கருத்தை அருளிச்செய்கிறார், ‘வலி இல்லாதான்’ என்று
  தொடங்கி.