New Page 1
எட்டாந்திருவாய்மொழி -
பா. 3 |
327 |
வெங்கூற்றம்-அந்தகன்
‘தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாம். என்றது, அழித்தல் தொழிலில் 2உருத்திரனுக்கு
அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையைச் சொன்னபடி. இவை என்ன விசித்திரமே-இவை என்ன ஆச்சிரயந்தான்!
அருளாய்.
(2)
742
சித்திரத் தேர்வல
வா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனை யோர்உக
மும்அவை யாய்அவற் றுள்இயலும்
ஒத்தஒண் பல்பொருள்
கள்உலப் பில்லன வாய்வியவாய்
1வித்தகத்
தாய்நிற்றி நீஇவை என்ன விடமங்களே!
பொ-ரை :
‘அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற
ஒத்தனவாயும் ஒள்ளியவாயும் எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின்
வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்; இவை என்ன வேறுபாடுகள்!
அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.
வி - கு :
‘எத்தனையோர் உகம் அவையுமாய்’ எனப் பிரித்துக் கூட்டுக. ‘ஒத்த ஒண் உலப்பு இல்லன பல்பொருள்களாய்’
என்க. வியவு - வேறுபாடு, விடமம் - வேறுபாடு.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 2‘கிருதயுகம் முதலான யுகங்களையும், அந்த அந்தக் காலங்களில் உண்டான தேவர்
மனிதர் முதலான பொருள்களையும் விபூதியாகவுடையவன்,’ என்கிறார்.
சித்திரம் தேர்
வலவா - விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே! 3விசித்திரமாவது, துரோணன்
கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க, அவனை வளைந்து அவனுக்கு அவ்வருகே தேரைக்
கொடுபோய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல். அன்றிக்கே, ‘வீடுமன் கையில்
அம்பு தூரப்போய்
______________________________________________________________
1. ‘வித்தகத்தால்’
என்பதும் பாடம்.
2. பின் மூன்று அடிகளையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. விசித்திரத்தை
இரண்டு வகையாக அருளிச்செய்கிறார், ‘விசித்திரமாவது’
என்று தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று
தொடங்கியும். கையும் அணியும்
வகுத்து - போரிலே வியூகமாகப் பிரித்து.
|