முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

எட்டாந்திருவாய்மொழி - பா. 9

337

    முன்னிய மூவுலகும் அவையாய்-பிரவாஹ ரூபத்தாலே பழையதாகப் போருகிற மூவுலகுக்கும் கடவையாய். மூவுலகு - மூன்று வகைப்பட்ட ஆத்துமாக்கள்; அல்லது, மூன்று உலங்கள். அவற்றைப் படைத்து - ‘உலகமானது போது, அவற்றை உண்டாக்கி’ என்கிறது. ‘ஆத்துமாக்களான போது, அவர்களுக்கு ஞானத்தின் மலர்ச்சியை உண்டாக்கி’ என்னுதல். பின்னும் உள்ளாய் புறத்தாய்-உள்ளும் புறம்பும் பரந்திருக்கின்றாய்! இவை என்ன இயற்கைகளே-உனக்கு இவைதாம் விளையாட்டாக இராநின்றன; எங்களுக்கு இவைதாம் ஆச்சரியமாக இராநின்றன.

(8)

            748

        என்ன இயற்கைக ளால்எங்ங
             னேநின்றிட் டாய்என்கண்ணா!
        துன்னு கரசர ணம்முத
             லாகஎல் லாஉறுப்பும்
        2உன்னு சுவைஒளி ஊறுஒலி
             நாற்றம் முற்றும்நீயே
        உன்னை உணர உறில்உலப்
             பில்லை நுணுக்கங்களே.

   
பொ - ரை : ‘என் கண்ணா! எவ்வகையான இயற்கைகளோடு கூடி என்ன பிரகாரத்தால் நிற்கிறாய்? செறிந்திருக்கின்ற கை கால் முதலான எல்லா அவயவங்களும் நீயே; நினைக்கப்படுகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படுகிற புலன்கள் முழுதும் நீயே; உன்னை அறியல் உற்றால் நுணுக்கங்கள் எல்லை இல்லாதவனாய் இருக்கின்றனு,’ என்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 3ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச்செய்கிறார்.

    என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா-என்ன தன்மைகளையுடையையாய்க்கொண்டு என்ன பிரகாரத்தாலே நிற்கிறாய்? எனக்குப் பவ்யனான கிருஷ்ணனே! துன்னு கர சரண

______________________________________________________________

1. ‘முன்னிய’ என்றது, ‘பிரவாகரூபத்தால் நித்தியம்’ என்றபடி. பிரவாகம்-வெள்ளம்.

2. ‘சுவைஒளி ஊறு ஓசை நாற்றமென் றைந்தின்’

என்பது, திருக்குறள்.

3. திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.