என
358 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
என்னுதல். என்று மறப்பேனோ
- 1‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனிமேல் நினைக்கைக்குக் காரணமான
காலத்தை எல்லாம் மறக்கைக்கு உடலாக்கினால்தான் மறப்பனோ?’ என்றது, ‘முன்பு நினைக்கையில்
உள்ள அருமையோபாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருகையும்: இனி ஏதேனும் ஒரு நாள் தான்
என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.
(3)
754
அப்பனை என்று
மறப்பன்என் ஆகியே
தப்புதல் இன்றித்
தனைக்கவி தான்சொல்லி
ஒப்பிலாத் தீவினை
யேனை உயக்கொண்டு
செப்பமே செய்து
திரிகின்ற சீர்கண்டே.
பொ-ரை : ‘என்னைக்
கருவியாகக்கொண்டு தவறுதல் இல்லாமல் தன்னையே தான் கவி சொல்லி, ஒப்பு இல்லாத தீய வினைகளையுடையேனான
நான் உய்யும்படி அங்கீகரித்து. செவ்வையான காரியங்களையே செய்து போகின்ற சீலத்தைக் கண்டு
வைத்தும், என் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.
வி-கு :
‘தீவினையேனை உய்யக் கொண்டு என்னாகித் தனைக் கவிதான் சொல்லிச் செப்பமே செய்து திரிகின்ற
சீர் கண்டும் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.
ஈடு : நான்காம்
பாட்டு. 2‘தானே தன்னைக் கவிபாடிக் கொண்டனாகில், ஓர் ஆச்சரியம் இல்லை; அதற்குத்
தகுதி இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு தப்பாமே கவிபாடின இந்த உபகாரத்தை இனி மறக்க உபாயம்
இல்லை,’ என்கிறார்.
அப்பனை என்று மறப்பான்-உபகாரன்
ஆனவனை நான் என்று மறப்பன்? 3இனி, அவன் அபகாரம் செய்தால் தான் மறக்கப்போமோ?
நீர் மறக்க ஒண்ணாதபடி அவன் செய்த உபகாரம் யாது?’
_______________________________________________________________
1. ‘என்று மறப்பனோ’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘முன்பு’ என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘முன்பு நினைக்கையில்’
என்று
தொடங்கி. அருமையோபாதி-அருமையைப்போல.
2. திருப்பாசுரம் முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. மறக்கப்
போகாமையின் உறைப்பை அருளிச்செய்கிறார், ‘இனி., அவன்’
என்று தொடங்கி.
|