முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

முதல் திருவாய்மொழி - பா. 10

41

    என்பரஞ்சுடரே! என்றுன்னை அலற்றி
        உன்இணைத் தாமரை கட்கு
    அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
        வன்ப ரங்கள் எடுத்து ஐவர் திசைவலித்து
            ஏற்று கின்றனர்
    முன்பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ!

   
பொ-ரை :
‘என் பரஞ்சுடரே! முற்காலத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியே!’ என்பதாக உன்னையே அலற்றி உனது இரண்டு திருவடிகட்கு அன்போடு உருகி நிற்குமது ஒழிய, சரீரமாகிய சும்மாட்டைக் கொடுத்தாய்; ஐவர், வலிய விஷயங்களாகிய பாரங்களைச் சுமத்தித் திக்குகள் தோறும் இழுத்துத் தாக்குகின்றனர்; அந்தோ!

    வி-கு: சுமடு-சும்மாடு, ஐவர் - ஐம்பொறிகள், வலித்து - இழுத்து, ‘ஓ’ என்பது, துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தது.

    ஈடு: பத்தான் பாட்டு. 1‘அடிமைக்கு விரோதியாய் விஷய அனுபவத்திற்குப் பாங்கான உடம்பைத் தந்தாய்; அதுவே காரணமாக ஐந்து இந்திரியங்களும் நலியாநின்றன; அவற்றைப் போக்கியருளவேண்டும்!’ எனத் துயரத்தோடு கூப்பிடுகிறார்.

    என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி - ‘எனக்கு உன் வடிவழகினைக் காட்டி உபகரிக்குமவனே!’ என்று உன்னைக் குறித்து அடைவுகெடக் கூப்பிட்டு. உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்குமது நிற்க - ஒன்றுக்கு ஒன்று ஒப்பாய் இருப்பன இரண்டு செவ்விப்பூப் போலே இருக்கிற உன் திருவடிகளில் இனிமையை நினைத்து அன்பு வசப்பட்டவனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்துமாவுக்குச் சொரூபமாகக் கடவது. சொரூபம் இதுவாக இருக்க, சுமடு தந்தாய் - உன் பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கூடியதான சரீரத்தைத் தந்தாய்; என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ; அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று. 2இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக்கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக்கொண்டு

_____________________________________________________________________

1. ‘சுமடு தந்தாய், ஏற்றுகின்றனர், அமுதம் கொண்ட மூர்த்தியோ’
  என்பனவற்றைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘அது நிற்கச் சுமடு தந்தாய்’ என்பதற்குத் திருஷ்டாந்தம் கட்டுகிறார்,
  ‘இராஜபுத்திரன்’ என்று தொடங்கி. அடி அறியாதார் - இராஜபுத்திரன்
  என்ற காரணம் அறியாதார்.