முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்

431

    விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போலே. பக். 242.

    மண் தின்ன வேணும் என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிகாரம் பண்ணுமாறு போலே. பக். 244.

    கி்ரந்தி கிடக்கிச் செய்யும் பரிகாரம் போலே. பக்: 244.

    புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே. பக். 244.

    கூளமும் பலாப்பிசினும் போலே. பக். 247.

    ஆர்த்தியாலே நிரம்பிற்று ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிடுமாறு போலே. பக். 249.

    படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டால் தப்பவேணும் என்று பார்க்குமாறு போலே. பக். 250.

    ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே. பக். 250.

    ‘என் தாயே’ என்பாரைப் போலே. பக். 252.

    பெற்ற தாய் வளர்க்குமாறு போலே. பக். 252.

    பருந்து இறாஞ்சினாற்போலே. பக். 253.

    குழந்தையைப் பெறவேணும் என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே. பக். 257.

    பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே. பக். 265.

    அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே. பக். 266.

    காலப்பூ அலர்ந்தாற்போலே. பக். 268.

    புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே. பக். 274.

    தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே. பக். 276.

    பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே. பக். 279.

    இராசத் துரோகிகளைக் கொல்லும் போது இராச சின்னங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலே. பக். 282.

    மூலபலத்தின் அன்று பார்த்த பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற்போலே. பக். 291.

   
பாம்பைக் கண்ட அச்சம் போலே. பக். 291.