முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

கண

இரண்டாந்திருவாய்மொழி - பா. 8

87

கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் சீயர். கொழுந்து - 1கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே. ‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே,  2இப்பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து, ‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்.

(7)

                      861

        ‘கொழுந்துவா னவர்கட்கு!’ என்னும்’குன் றேந்திக்
             கோநிரை காத்தவன்!’ என்னும்;
        அழும்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்;
             2‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
        எழுந்துலேமல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
             ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
        செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்!
             என்செய்கேன் என்திரு மகட்கே?

   
பொ - ரை : ‘நித்தியசூரிகளுக்குக் கொழுந்து போன்றவனே!’ என்பாள்; ‘மலையைக் தூக்கிப் பிடித்துப் பசுக்கூட்டங்களைக் காத்தவனே!’ என்பாள்; அழுவாள்; தொழுவாள்; உயிரும் வேகும்படியாக வெப்பத்தோடு மூச்சு விடுவாள்; ‘அஞ்சன வண்ணனே!’ என்பாள்;

_______________________________________________________________

1. ‘கொழுந்து’ என்றதற்கு பாவமும், பாவத்திற்கு பிரமாணமும் காட்டுகிறார்,
  ‘கொள் கொம்பு’ என்று தொடங்கியும். ‘நாயகனுடைய’ என்று தொடங்கியும்.

        ‘பதி ஸம்யோக ஸூலபம் வய;’

என்பது, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.

2. ‘தசை முறுகினால்’ என்று தொடங்கி அருளிச்செய்த வாக்கியத்தின்
  பொருளை விவரணம் செய்கிறார், ‘இப்பாசுரத்தில்’ என்று தொடங்கி.
  அன்றிக்கே, முடிக்கும் வினை இல்லாமைக்குக் காரணம்
  அருளிச்செய்கிறாராகவுமாம்.

3. ‘அஞ்சன வண்ணன்என் ஆருயிர் நாயகன் ஆளாமே
   வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே’

என்பது, கம்பராமா. குகப்படலம்.