பர
94 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
பரியந்தமாக்கிக்கொண்டு
நீ கிடந்தால், 1‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலைபெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று
இருக்க அன்றோ அடுப்பது? அது மாட்டுகின்றிலேன். இவள்தனக்கு முடிவு தெளிகிலேன் - 2இவள்
நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப்போமோ?
(9)
683
‘முடிவிவள் தனக்குஒன்று
அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல
காளியே!’ என்னும்;
‘கடிகமழ்
கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக்
கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை
வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண்திரு
வரங்கனே!’ என்னும்;
அடியடை யாதாள்
போல்இவள் அணுகி
அடைந்தனள்
முகில்வண்ணன் அடியே.
பொ-ரை :
‘இவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்கிறாள்; ‘மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இந்திரனுக்கு
அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘வாசனை வீசுகின்ற கொன்றைப் பூமாலையைச்
சடையிலே தரித்தவனான சிவபெருமானுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘நான்முகனான
பிரமனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்றகிறாள்; ‘தன்னோடு ஒத்த வடிவையுடைய நித்தியசூரிகளுக்குத்
தலைவனே!’ என்கிறாள்; ‘வளப்பம் பொருந்திய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!’ என்கிறாள்;
அவன் திருவடிகளை அடையாதவளைப் போலே இருந்த இவள் முகில் வண்ணனாகிய அவன் திருவடிகளைக் கிட்டி
அடைந்தாள்’ என்றவாறு.
ஈடு :
பத்தாம் பாட்டு. 3‘இனிக் கிட்டமாட்டாளோ!’ என்னும்படி துக்கத்தை அடைந்திருந்த
இவள், பெரிய பெருமாள் திருவடிகளைக் கலக்கப்பெற்றாள் என்கிறாள்.
________________________________________________________________
1. ‘ஸ்த்திதோஸ்மி கதஸந்தேஹ:’
என்பது, ஸ்ரீகீதை, 18:73.
2. ‘தெளிந்திருக்க மாட்டாமைக்குக்
காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இவள் நிலை’ என்று தொடங்கி.
3.
‘அடியடையாதாள்போல் இவள் அணுகி யடைந்தனன் முகில் வண்ணன்
அடியே’ என்பதனைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|