போன்ற பெண்) களும்
உள்ளன; பூங்கணை......சில மறுகு - வீதிவழியே
செல்வோர்களது புலங்களைப் பூங்கணைகள் மயங்கச் செய்யும் சில
மறுகுகள்; ஓங்கும்.......உளவால் - மிக்குயர்ந்த தோரணங்களும்
நிறைகுடங்களும் உள்ளன.
(வி-ரை.)
பாங்கின் - மேற்பாட்டிற் சொன்ன நெற்பழனம்
கமுகுச்சோலை என்றிவற்றினை அடுத்து அவற்றின் பக்கத்தில்.
மாடம்
பல மணி வெயிலும் சுலவு எயிலும் உள என்க. வெயில்
-
ஒளி - நிறம். பலமணி வெயில் என்றது மணிகளின்
பற்பல நிறங்களை.
மணிகளின் பல ஒளிகளும் சுற்றிய எயில் என்று உரைப்பாருமுண்டு. சுலவு
எயிலும் - எயில் - மதில். சுலவுதல் -
சூழ்தல். மாடம், பலமணி வெயிலும்
எயிலும் உள்ளன; அரங்கம், துகிற் கொடியும் நகிற்கொடியும் உள்ளன, மறுகு,
தோரணமும் கும்பமும் உள்ளன என முடிக்க. மாடம் முதலிய
மூன்றெழுவாய்களும் சாதியொருமையாகலின் உள என்னும் பன்மைக்குறிப்பு
வினைகளோடு முடிந்தன. உம்மைகள் எண்ணும்மைகள்.
ஞாங்கர்
- பக்கம். துகிற்கொடி - துணிகளாலாகிய
கொடிகள்.
கொடிகள் கட்டுவது மாடங்களுக்கும் வீதிகளுக்கும் அழகும் மங்கலமும்
தருவன என்பர். இவற்றுள் வெண்கொடி சிறந்ததென்பது மரபு.
"மாடமாளிகைக் கொடி. யருக்கன் மண்டலத் தணாவும்" (திருஞான -
திருவாரூர் - நட்டராகம் - திருவிராகம்), "நிறைவெண் கொடிமாடம்" (திருஞா
- கோயில் குறிஞ்சி), "வெண் கொடியாடும் சீர் விளங்கு" (97)
என்றவிடத்துரைத்தனவும், "மேலம் பரதல நிறையுங் கொடிகளில்" (திருநா.
புரா. 164); "சோதிவெண் கொடிகளாடுஞ் சுடர் நெடுமறுகு" (474) என்பன
பலவும் காண்க.
அரங்கம்
- பெண்களின் ஆடல் பாடல்கள் நிகழும் பொது இடங்கள்.
"காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடுங் கவினார் வீதித்,
தேந்தாமென்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவை யாறே" (ஆளுடைய
பிள்ளையார் மேகராகக்குறிஞ்சி) என்ற தேவாரமும் பிறவும் காண்க.
நகிற்கொடி
- நகில் - முலை. கொடி - கொடிபோன்ற பெண்கள்.
தோரணம்
- பூரண கும்பம் - இவை மங்கலங் காட்டும்
பொருள்கள். ஓங்குநிலை - மேலே தூக்கி உயரக்
கட்டியது குறித்தது.
பூங்கணை
- பூக்களாலாகிய அம்புகள் - மன்மத பாணங்கள். புலம்
மறுகும் - புலங்களில் மறுகுதலை - மயக்கத்தை - விளைத்தற்கேதுவாகிய.
புலம் - ஐம்புலம்.
சிலமறுகு
- மறுகு - வீதி. புலம் மயங்குதற்கேதுவாவன
சில
வீதிகளில் உள்ள விலைமாதரின் ஆடல்பாடல் முதலிய காட்சிகளாலாவன.
இவ்வாறுள்ள நிகழ்ச்சி சிலவேயாம். அவை கடையொழுக்கமுமாம் என்று
குறிப்பார் சிலமறுகு என்று கடையிற் கூறினார்.
பூங்கணை.........மறுகு
- பூங்கணையின் வழியிலே சார்கின்றோரது
புலன்களிலே மறுகுதற்கேதுவாகிய சிலமறுகென்க. எனவே "முத்தாந்த வீதி
முளரி தொழுமன்பர்" அம்மறுகிலுள்ள புலங்களில் மயங்கார் என்பது
வெதிரேக அணியாற் பெறும் பொருள்.
பாங்குமணி
- ஓங்குமணி - என்பனவும் பாடங்கள். 5
871. |
மனைசாலு
நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும்
வினைசாலு முழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயன் மயிலனையார் நடம்புரியப் புகன்முழவங்
கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால். 6
|
(இ-ள்.)
புனைசாயல்.....கஞ்சாறு - அணிபுனைந்த சாயலின்
மயில்போன்ற பெண்கள் நடமாட அதற்கிசைய ஒலிக்கும் முழவுகள்
முழங்குகின்ற
|