பெறுதல் முதலியன.
முட்டா வண்ணம் செய்யும் - "செய்பணி தவாமை
யுய்த்தார்" (837) என்றது காண்க.
நைகுறல்
- நங்கை மற்றடகு - நங்கையார் - செலுத்துநாளில் -
என்பனவும் பாடங்கள். 12
915.
(வி-ரை.) நெடு வட வான மீன் என்க.
வடமீன் - அருந்ததி.
நெடுமை. நீண்ட புகழுடைய கற்புக்குறித்தது.
வடக்கில் நீண்ட தூரத்தில்
தோற்றப்படும் என்றலுமாம். மீனே - ஏகாரம்
தேற்றம். மீனே அனையவர்
- கற்பினால் அருந்ததியே போல்வார். கற்பினுக்கு எடுத்துக்காட்டாக
அருந்ததி மீன் உருவுடன் விளங்குதலால் கல்யாணங்களில் அருந்ததி
பார்த்தல் ஒரு சடங்காக வழங்குகின்றது. "சாலினி மங்கலை தன்னொடு
கண்டான்" (தெய்வ - அம்மை - திருமண - 253) என்ற கந்தபுராணமும்
காண்க. (சாலினி - அருந்ததி).
தண்ணீர்
வார்க்க அமுது செய்து - தண்ணீரைத் தாகந்
தீர்ப்பதற்குரியதாகக் கொண்டதன்றிப் பசிதீர்க்கும் உணவுப் பண்டமாகவும்
கொண்டார் என்று குறிப்பார் பருகி என்னாது அமுதுசெய்து
என்றார்.
"துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை" என்ற திருக்குறளும் காண்க.
வினைசெயல்
- வினை - செந்நெல் - செங்கீரை - மாவடு - ஆன்
ஐந்து தேடுதலும், நெல்லுக்காகக் கூலி வேலை செய்தலும் முதலிய தொழில்.
செயல் - வினையாற் பெற்றவற்றை இறைவனுக்குத்
திருவமுதாக்கி ஊட்டுதல்.
செல்ல
மேவுநாள் - செல்லும்படி - ஒழுகும்படி - பொருந்தும்
நாட்களிலே.
முனைவனாரது
மிக்க தொண்டர் என்க. மிக்க -
அன்பினால்
மிக்க. பெருமை மிக்க. முனைவர் - முன்னவர்
- தலைவர் - சிவபெருமான்.
மொழியப்
பெற்றேன் - சொல்லும் பேறு எனக்குக் கிடைத்தது.
இப்பெரியவரது புண்ணிய சரிதத்தை, அதிலும், அதனுட் சிவனருள் வளைவு
தேற்றமாகும் இப்பகுதியைச் சொல்வது பெரும்பேறு என்பது. பெரியோர்களது
சிவசரிதங்களை நினைப்பதும், சொல்லுதலும், கேட்டலும்
சிவபுண்ணியங்களாம். "தணப்பி லெம்புகழ் சாற்றல்" (திருவாதவூர் - புரா -
திருப்பெரு - சரு - 69), முதலியவை காண்க. திருவருள் விளக்கமாகும்
இடங்களை இவ்வாறு விதந்து கூறிக் கேட்போரை எச்சரித்து வழிப்படுத்துதல்
ஆசிரியரது மரபு. 790-ல் உரைத்தவை பார்க்க.
தொண்டனார்
- மேல் இப்பாட்டில் வினை செயல்களை அன்பு
ஊக்கியிடச் செய்தல் குறிக்க அன்பனார் என்ற
ஆசிரியர், இனிவரும்
நிகழ்ச்சி, தொண்டுசெய்கின்ற விடத்து நிகழ்வதாகலின் தொண்டர்க்கு
அங்கு நிகழ்ந்தது என்று குறித்தார். 13
916.
|
முன்புபோன்
முதல்வனாரை யமுதுசெய் விக்க மூளும்
அன்புபோற் றூய செந்நெ லரிசிமா வடுமென் கீரை
துன்புபோ மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து போதப்
பின்புபோ மனைவியாரான் பெற்றவஞ் சேந்திச் சென்றார். |
14 |
(இ-ள்.)
வெளிப்படை. முன்போல முதல்வரை அமுது
செய்விப்பதற்காக, மூண்டுமேன் மேல் எழும் அரவது அன்புபோலவே
தூயதாகிய செந்நெல்லரிசியினையும், மாவடுவினையும், மெல்லிய
செங்கீரையினையும் துன்பநீங்கிய மனத்தையுடைய தொண்டராகிய தாயனார்
கூடையில் வைத்துச் சுமந்து செல்ல, அவர் பின்பு செல்லும் திருமனைவியார்
ஆனைந்து என்னும் பஞ்சகவ்வியத்தை மட்கலத்திற் கொண்டு கையில்
ஏந்திச் சென்றார்.
(வி-ரை.)
முன்புபோல் - முன்னை நாட்களிற்போல
- வழக்கம்போல.
|