சிவனுக்கு அளித்து
எஞ்சியதே இவர்களுக்கு அளிக்கப்பெறுகின்றது.
இவ்வாறு வேள்வியினிறுதியில் இவர்களுக்கு அவி தரப்படுதலின் அதுவரை
இவர்கள் காத்திருக்க வேண்டியவர்களாதலால் இவர்களது ஊர்திகளுக்கும்
அதுவரை தங்குமிடம் வேண்டுவதாகும் என்பதும் இப்பாட்டின்
குறிப்பாதலும் கண்டுகொள்க. 4
1210.
|
தீம்பா
லொழுகப் பொழுதுதொறு மோம தேனுச் செல்வனவுந்,
தாம்பா டியசா மங்கணிப்போர் சமிதை
யிடக்கொண்டணைவனவும்,
பூம்பா சடைநீர்த் தடமூழ்கி மறையோர் மகளிர் புகுவனவு
மாம்பான் மையினில் விளங்குவன வணிநீண் மறுகு பலவுமுள.5 |
(இ-ள்.)
வெளிப்படை.. ஓமங்களுக்குப் பஞ்சகவ்வியத்தின் பொருட்டு
வளர்க்கப்படும் பசுக்கள் இனிய பால் ஒழுகும்படி பொழுதுதோறும்
செல்வனவும், தாங்கள் பயின்ற வேத சாகைகளைக் கணித்துக்
கொள்வோராய் மாணவகர்கள் ஓமத்துக்குரிய சமிதைகளைக் கொண்டு
அணைவனவும், பூக்கள் நிரம்பிய தடங்களில் நீர்மூழ்கி மறையவர் மகளிர்கள்
புகுவனவும் ஆம் பான்மையினில் விளங்குவனவாகிய நீண்ட தெருக்கள்
பலவும் அந்நகரில் உள்ளன.
(வி-ரை.)
செல்வனவும், அணைவனவும், புகுவனவும் ஆம்
பான்மையினில் விளங்கும் மறுகுபலவும் உள்ளன என்றபடியாம். செல்வன,
அணைவன, புகுவன - செல்வதற்கும் அணைவதற்கும் புகுவதற்கும்
இடமாவன என்க.
பொழுது
தொறும் தீம்பால் ஒழுகச் செல்வன - என்க. மடியின்
மிக நிறைதலால் கறவாமே பால் ஒழுகச் செல்வது பசுக்கள் செழித்து
வளர்தற் கறிகுறியாம் அத்தகைய பசுக்கள் கன்றை நினைந்து செல்வதனாலும்
பால்கறவாமே ஒழுகுவதா மென்ப. இவ்வாறு பால் ஒழுகச் செல்லும்
பசுக்களை இன்றும் கோயமுத்தூர்ச் சில்லா அரசாங்கத்தாரது விவசாயப்
பண்ணையிலும் அவ்வாறுள்ள பிற சில இடங்களிலும் காணலாம். கறவாமே
பசுக்கள் பால் பொழிதலின் விளைவாகும் இச்சரிதக் குறிப்பும் காண்க. 1235
பார்க்க.
ஓமதேனு
- ஆகுதிகளுக்குப் பால் தரும் பசுக்கள் - 1247 பார்க்க.
தேனு - சாதி பொருமை.
தாம்
பாடிய சாமம் கணிப்போர் - பாடிய - இங்குக் கற்ற என்னும்
பொருளிலும், சாமம் - பொதுவாய் வேதம் என்ற பொருளிலும் வந்தன.
கணிப்போர் - தாம் கற்ற வேதப் பகுதிகளை
மீள மீளச் சொல்லிப் பயின்று
கணக்கிடும் சிறுவர். சுரங்களினளவும் - பதம் - சடை
- கிரமம் என்ற
முறைகளினளவும், காலத்தினளவும் கணக்கிட்டுப் பயில்வதால் கணிப்போர்
என்றார்.
கணிப்போர்
சமிதை இடக்கொண்டு அணைவனவும் -
நித்தியாக்கினிக்கு வேண்டும் சமிதைகளைக் கொண்டுவருதல் மறைபயிலும்
சிறுவர்களின் கடமைகளுள் ஒன்றாக வைப்பது முன்னாளில் மறையவர்
வழக்குக்களுள் காணப்படும். ஊர் வெளியில் உள்ள வேதம் பயில்
மடங்களிற் சென்று மறை பயின்ற பின் வேளையில் அச்சிறுவர் அங்குச்
சமிதை சேகரித்து மனைக்குத் திரும்பும்போது, காலத்தை வீணாக்காமல் தாம்
கற்ற மறைப்பகுதிகளைக் கணித்துக்கொண்டே செல்வர் என்பது. வீண்
பேச்சுப் பேசி வீதி செல்லும் இந்நாள் மாணவகர் இதைக் கணிப்பார்களாக.
பூம்பாசடை....புகுவன
- மறையோர் மகளிர் நகர்ப்புறத்தில் உள்ள
பூம் பொய்கைகளில் சென்று குளித்து நீர்கொண்டு மனைக்கு வருதலும்
முன்னாள் மறையவர் வழக்குக்களுள் ஒன்றாகும். மேற்சொல்லிய
இவ்வழக்குக்கள் இந்நாளில் அருகி வருதல் வருந்தத்தக்கது.
|