|
| ஆளுடைய பிள்ளையாரைப் பற்றிய திருமுறைகளுட் சில |
| ஆளுடைய அரசுகள் | திருநேரிசை |
|
| காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் |
| னாயிரங் கொடுப்பர் போலு மாவடு துறைய னாரே |
| ஆளுடைய நம்பிகள் |
| "நாளு மின்னிசையாற்றமிழ் பரப்பும், ஞானசம்பந் தனுக்குல கவர்முன் |
| றாள மீந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை" |
- தக்கேசி - திருக்கோலக்கா |
| "திருமிழலை, யிருந்துநீர் தமிழோ டிசைகேட்கு |
| மிச்சையாற் காசு நித்த னல்கினீர்..." |
- சீகாமரம் - திருவீழிமிழலை |
| "நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை |
| சொல்லியவே சொல்லி யேத்துகப் பானை" |
- தக்கேசி - திருவலிவலம் |
| சேந்தனார், திருவிசைப்பா | திருவீழிமிழலை |
|
| "பாட லங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ்மலர் சூடி |
| நீட லங்காரத் தெம்பெரு மக்கணெஞ்சினு ணிறைந்து நின்றானை" |