| |
| சுடர் விமானம் - ஒளியுடைய ஆகாய விமானங்கள். |
| மஞ்சுறை விசும்பு - மேகமண்டலம் அளவும் உயர்ந்தஆகாயம். தேவர்களின் விமானங்கள் செல்லும் உயரம் குறித்து. |
| ஆதரவு - ஆசை; தழைத்தல் - பெருகுதல்; மண அணிகாண - மண அணிகள் தேவருலகத்தும் காணவொண்ணாதபடி அற்புதமாயிருத்தல் குறிப்பு; நிலவுலகத்தில் மண எழுச்சியிற் கலந்துசென்ற பேறுபெற்ற மக்கட் கூட்டம் முழுதும் பின்னர்ப் பிள்ளையார்அருளால் முத்திபெற்று மீளாநெறி யடையவுள்ளாராக; இத்தேவக் கூட்டம் அப்பேறு பெறும் தகுதியில்லாதவராகி மணவணி காண்பதில்மட்டும் அமைவுபடுவர் என்பது காண என்றதன்குறிப்பு. பின்னர்த், "தூரத்தே கண்டு நணுகப் பெறா, விண்ணவருமுனிவர்களும் விரிஞ்சனே முதலோரும், எண்ணிலவ ரேசறவு தீரவெடுத் தேத்தினார்" (3153) என்பது காண்க; தேவர்கள்தமது அனுபவநாள் எல்லையில் புவனியில் வந்து பிறந்து சிவதருமங்கள் புரிந்த பின்னலே நாளடைவில்முத்தியடையத்தக்கார் என்பது நூற்றுணிபு; "புவனியிற் போய்ப்பிற வாமையினாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கிற வாறு" (திருவா). |
| 1204 |
3103 | மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி முற்றவித் தலத்தி னுள்ளோர் மொய்த்துடன் படரும் போதில் அற்புத நிகழ்ச்சி யெய்தவணைதலான் மணமேற் செல்லும் பொற்பகை மணத்தின்சாயை போன்றுமுன் பொலியச் செல்ல; | |
| 1205 |
3104 | தவவர சாள வுய்க்குந் தனிக்குடை நிழற்றச் சாரும் பவமறுத் தாள வல்லார் பாதமுள் ளத்துக் கொண்டு புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து சிவனமர்ந் துறையு நல்லூர்த் திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார். | |
| 1206 |
| 3103. (இ-ள்.) மற்றிவர்...காட்சி - மற்று இத்தேவச்சாதியர் முதலினோர் நெருங்கி மேற்செல்லும் மங்க்லமாகிய அழகின் காட்சியானது; முற்ற...அணைதலான் - இந்நிலவுலகத்துள்ளோர் யாவரும்நெருங்கிக்கூடித் திருமண எழுச்சியிற் செல்லும் காலத்தில் - அற்புதமாகிய தன்மை பொருந்த மேலே உடன் அணைதலினாலே; மணமேல்....சாயைபோன்று - மண எழுச்சியின்மேலே செல்கின்ற அழகு பொருந்தியதொரு மண எழுச்சியினது சாயையினைப் போல; முன்பொலியச் செல்ல முன்னே விளங்கும்படி போக; |
| 1205 |
| 3104. (இ-ள்.) தவஅரசு....நிழற்ற - தவ அரசாங்கத்தை ஆட்சிபுரிதற்கும் பிடித்தல்போல ஒப்பற்ற முத்துக்குடைமேல் நிழற்ற; சாரும்....கொண்டு - சார்கின்ற பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரது திருவடிகளைத் தமது திருவுள்ளத்துக் கொண்டவராய்; புவனங்கள்......போந்து - புவனங்களெல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்தவதரித்த சீகாழி வேந்தராகிய பிள்ளையார் சென்றருளி; சிவன்...சேர்ந்தார் - சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய திருநல்லூர்ப் பெருமணத்தினைச் சேர்ந்தருளினர். |
| 1206 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |