பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்791

 2538. (வி-ரை) மழவிடை இளங்கன்று ஒன்று வந்து - மழ - இளம் - ஒரு பொருட் பன்மொழி; மிக்க இளமை குறித்தது; கன்று - என்பது அதனை மேலும் வலியுறுத்திற்று; விடைக்கன்று - ஆண் கன்று; விடை - ஆண்பால் என்ற குறிப்பளவில் தந்து நின்றது; சிவசம்பந்தமாகிய குறிப்புமாம்; ஒன்று - ஒப்பற்றது; வந்து - வெளியே நின்றும் போந்து; பிள்ளையாரது வருகைக் குறிப்பு.
 உழதுதல் - சுற்றிச் சூழ்ந்து மிதித்துக் கலைத்தல்;
 சிதறி ஓடுதல் - சிதைந்து விரைந்து நீங்குதல்;
 விழ ஒரு புகலுமின்றி - விழ - அபயம்புக்கு ஒளிக்க என்ற பொருளில் வந்தது; அரசனது புகலிடம் இழப்பது குறிப்பு
 மேதினிதன்னை விட்டு - பூமியில் பற்றுக்கோடின்றி; நிலவுலக வாழ்வை நீத்து என்ற குறிப்பும்பட நின்றது.
 நிழலிலா மரங்கள் - கழுக்கோல்களின் குறிப்பு. இப்பாட்டிற் கூறப்பட்ட கனாத்திறம் பிள்ளையாருடன் சமணர் கூட்டம் வாது செய்து தோற்று ஓடிக்கழுவேறி முடிய நின்ற விளைவுகளைக் குறித்துணர்த்தல் காண்க;
 என்பார் - என்பதும் பாடம்.
 640
 2539. (வி-ரை) ஆவதென்! - இவையெல்லாம் என்னாய் முடியுமோ? நம்மால் இதற்குத் தீர்வு செய்யலாவதென்றோ? என்ற குறிப்புமாம்.
 பாவிகாள்! - இரங்குதலின் கண் வந்த குறிப்பு மொழி; "பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ?" (818); இக்கெடுதியைத் தமது பாவநிலையின் மேல் .சுமத்திக் கூறும் உலக வழக்குப் பற்றியது.
 இக்கனாத்திறம்...திடமே - இதன் காரணமும் முடியுமெல்லையும் நம்மாலறியப் படாவிடினும் இஃதொன்று மட்டும் திடம் - உறுதி - என முடித்தனர்; கனாக்கள் அவர்களையும் அவர்களனைவரையுமே பற்றி நிற்றலால் இவ்வாறு முடித்தனர். ஏகாரம் தேற்றம்.
 அடிகண்மார்க்கு மேவியதீங்கு தன்னை விளைப்பது - மேவிய தீங்காவது வரக்கடவதென்றறிவிக்கப்பட்ட தீமை; முன்கன்மத்தாற் பொருந்துவதாகிய என்ற குறிப்புமாம். அடிகண்மார் சீலமுடையராதலின் தீங்குவரக் கடவதன்று; ஆயின்முன்னை வினையால் வந்து மேவிய- பொருந்திய - என்பது குறிப்பு; மேவிய - என்று இறந்த காலத்தாற் கூறினார் உறுதி பற்றி; திடமே - உறுதியே:
 நுகர் பேரும் பதம் - நண்பகலில் கொள்ளும் உணவு: சமணர் இரவுண்ணா மரபுடையராதலின் பகலுணவை நுகர்பெரும் பதமும் - என்றார்; உம்மை சிறப்பு; பதமும் கொள்ளாதிருத்தல் - மனவருத்தமும் கவலையும் காரணமாக வந்த நிலை. அவர் தமது சமயத்தில் வைத்த அன்பின் மிகுதி காட்டிற்று. பதம் - வீட்டுநிலை என்ற குறிப்புமாம். பதம் கொள்ளார் - வீட்டுநிலை கைக் கொள்ளார்.
 யாவது செயல் ? - தீர்வாகச் செய்யத்தக்கது இன்னதென்றறிய மாட்டாது திகைத்த நிலை:
 

641

 அம்மையார்க்கும் அமைச்சனார்க்கும் நிகழும் நன்னிமித்தம்
2540
வ்வகை யவர்க ளெல்லா மந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபின் வந்த தடமயின் மடமென் சாயற்
பைவள ராவே ரல்குற் பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை யமைச்ச னார்க்கும் விளங்குநன் னிமித்த மேன்மேல்.
 

642